being created

முத்துராசா குமார்

From Tamil Wiki
Muthurasakumar -2800x4200

பெயர்

முத்துராசா குமார் , (1992) தமிழில் சிறுகதை, கவிதை, கட்டுரைகள் எழுதிவரும் எழுத்தாளர்.

பிறப்பு,கல்வி

·      முத்துராசா குமார் மதுரை  மாவட்டம் சோழவந்தான் அருகில் உள்ள தென்கரை கிராமத்தில்   பிறந்தவர். பெற்றோர் பெயர் : K.அமுதா, A.குமார்.பத்தாம்  வகுப்பு வரை அரசு உயர்நிலைப்பள்ளி, முள்ளிப்பள்ளம்  ,பிறகு உயர்நிலைக்கல்வியை அரசஞ்சண்முகனார் அரசு மேல்நிலைப்பள்ளி, சோழவந்தானில் பயின்றார்.

சென்னை பல்கலை கழகத்தில் இதழியல் & தொடர்பியல் துறையில் முதுகலை பட்டமும் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றிருக்கிறார்.

படைப்புலகம்

தனது இலக்கிய பங்களிப்பில்  முன்னோடிகளாக கி.ராஜநாராயணன், வைக்கம் முகமது பஷீர் ஆகியோரை குறிப்பிடுகிறார்.

இவரது முதல் கவிதைத் தொகுப்பு'பிடி மண் ' 2019ல் சால்ட் & தன்னறம் பதிப்பகத்தின் வாயிலாக வெளியாகியது.இரண்டாவது தொகுப்பு ' நீர்ச்சுழி ' 2020 இல் சால்ட் & தன்னறம்  பதிப்பகத்தின் மூலம் வெளியானது.சிறுகதைகள் ,கவிதைகள் மட்டுமல்லாமல் சூழலியல் கட்டுரைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்து வருகிறார்.

இலக்கிய இடம்

முத்துராசாகுமாரின்  கவிதைகள்  பெரும்பாலும் பால்யம் சார்ந்தவைகளாகவும், நீருடனான வெவ்வேறு வகை உறவுகளையும் பற்றியவைகளாகவும்  உள்ளன.மண்ணின் வாழ்க்கை சார்ந்த சொல்வளம், உள்ளூர்ப் பண்பாட்டு அனுபவங்கள் என்று வளமிக்க கவிதைகளை முத்து ராசா குமாரின் கவிதை  தொகுப்புகள் கொண்டிருக்கின்றன என்று கவிஞர் ,பத்திரிக்கையாளர்  ஆசை குறிப்பிடுகிறார்.

படைப்புகள்

சிறுகதைகள்

·       ஈத்து(2022)-சால்ட் & தன்னறம் வெளியீடு

கவிதைகள்  

·       நீர்ச்சுழி  (2020)- சால்ட் & தன்னறம் வெளியீடு

·       பிடிமண் (2019)- சால்ட் & தன்னறம் வெளியீடு

  

உசாத்துணை

https://www.hindutamil.in/news/literature/793985-book-release-3.html
https://www.vikatan.com/arts/literature/interview-with-tamil-poet-muthurasa-kumar


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.