அசலன் கதை
From Tamil Wiki
அசலன் மகாபாரத நாயகர்களில் ஒருவர். மகாபாரதப் போரில் கெளரவர்களுடன் நின்று போரிட்டவர்.
வாழ்க்கைக் குறிப்பு
அசலன் சுபலரின் மகன். காந்தாரத்தின் அரசர். சகுனி, வ்ருஷகன் ஆகியோர் இவரின் உடன்பிறந்தவர்கள்.
மகாபாரதப் போரில் அசலன்
அசலன் மகாபாரதப் போரில் கெளரவர்களின் தேரோட்டி நாயகர்களில் ஒருவர். யுதிஷ்டிரரின் ராஜசூய வேள்வியில் பங்கேற்றார். அசலனையும், வ்ருஷகனையும் அர்ஜுனன் போரில் கொன்றார்.
இறப்பிற்குப்பின்
வியாசர் உயிர்ப்பித்த புனித ஆத்மாக்களில் அசலனின் ஆத்மாவும் ஒன்று.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
07-May-2023, 18:53:41 IST