பிரபந்த தீபிகை
பிரபந்த தீபிகை (பொ.யு 19-ஆம் நூற்றாண்டு) சிற்றிலக்கியங்களுக்கு இலக்கணம் சொல்லும் பாட்டியல் நூல்களில் ஒன்று. ஆசிரியர் வேம்பத்தூர் முத்துவேங்கட சுப்பைய நாவலர்.
நூல் அமைப்பு
பதினான்கு சீர் விருத்தப் பாடல்கள் 200 கொண்டது இந்த நூல். சதகம் என்னும் நூல்வகையைச் சார்ந்தது.
உள்ளடக்கம்
பிரபந்த வகைகளும், பலவை பொருத்த வகைகளும் இதில் பேசப்படுகின்றன. இந்நூலில் பிற்கால பக்தி இயக்கத்தைச் சார்ந்த செய்திகள் பல உள்ளன. ஆழ்வார்கள் பிறப்பு, சைவ அடியார் ஆகிய செய்திகளுடன் கலியுக மன்னர்கள், நாயக்கர், நவாப்புகள் ஆகியோர் குறித்தும் தாள, ராக முறைகள் பற்றியும் வேதம், ஸ்மிருதி, உபநிடதம், சிவாகமம், தீட்சை ஆகியவற்றைப் பற்றியும் பேசப்பட்டுள்ளது
உசாத்துணை
- பிரபந்த தீபிகை, முனைவர்கள் ச.வே.சுப்பிரமணியன், அன்னி தாமஸ் ஆகியோர் தொகுப்பு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை வெளியீடு, 1982.
- தமிழ்வு தளம்
- தமிழ் இணையநூலகம் முழுத்தொகுதி
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.