அ. யேசுராசா
அ.யேசுராஜா (அ. யேசுராசா, அத்தனாஸ் யேசுராசா)(பிறப்பு : டிசம்பர் 30, 1946) ஈழக் கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர், பதிப்பாளர் . கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டவர் . யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் ஆகியவற்றிலும் செயல்பட்டு வருகிறார்.
பிறப்பு, கல்வி
யாழ்ப்பாணத்தில் குருநகர் என்ற கடலோரக் கிராமத்தில் டிசம்பர் 30, 1946 அன்று அத்தனாஸ், செபஸ்தியானா இணையருக்கு யேசுராசா பிறந்தார். கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரண தரம் (G.C.E. O/L) வரை, ஊரிலுள்ள சென். ஜேம்ஸ் ஆண்கள் பாடசாலையிலும், உயர்தரக் கல்வியைக் கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயத்திலும் கற்றார்.
தனி வாழ்க்கை
அ. யேசுராஜா அஞ்சல் அதிபர், தந்தியாளர் (Postmaster & Signaller) சேவையில் இணைந்து பணியாற்றி ஓய்வுபெற்றுள்ளார்.
இலக்கிய வாழ்க்கை
1975-ல் தொடங்கப்பட்ட அலை இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவரான யேசுராசா 1990 வரை தொடர்ந்து செயற்பட்டு 35 இதழ்களை வெளியிட்டார். 1994 -1995 காலப்பகுதியில் இளங்கவிஞர்களுக்கான இருமாத இதழான 'கவிதை' இதழை வெளியிட்டார். 2003 மார்கழி முதல் 'தெரிதல்' என்ற சிற்றிதழை வெளியிட்டு வருகிறார்.
இதழியல்
அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்தவர். இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். மாற்றுப் பத்திரிகையாக யாழ்ப்பாணத்தில் வெளிவந்த திசை வார ஏட்டின் (1989 – 1990) ஒரே துணை ஆசிரியராகவும் இருந்தவர்.
திரைத்துறை
1979 – 1982 காலகட்டத்தில், ஏ.ஜே. கனகரத்தினாவின் தலைமையின் கீழ் ‘யாழ். திரைப்பட வட்டம்’ என்ற அமைப்பின்மூலம், நல்ல பிறமொழிப் படங்களை யாழ்ப்பாணத்தில் திரையிடுவதில் ஆர்வத்துடன் இயங்கினேன். 1998 – 2006 வரையான ஆண்டுகளில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், பேராசிரியர் இரா. சிவச்சந்திரனுடன் இணைந்து, ஒவ்வொரு கிழமையும் பிறமொழிப் படங்களையும் குறிப்பிடத் தகுந்த தமிழ்ப் படங்களையும் விடியோவில் காட்டினோம்; காட்சியைத் தொடர்ந்து கலந்துரையாடலையும் நடத்தினோம். நல்ல திரைப்படங்கள் பற்றி அவ்வப்போது சிற்றிதழ்களில் எழுதியும் வந்துள்ளேன். அவ்வெழுத்துக்கள் ‘திரையும் அரங்கும் : கலைவெளியில் ஒரு பயணம்’ என்னும் நூலாக வந்துள்ளன. அண்மைக் காலங்களில் நடைபெறும் இளைஞர்களின் சில குறும்பட வெளியீட்டு நிகழ்வுகளிலும் எனது மதிப்பீட்டுக் கருத்துக்களை முன்வைத்து, உரையாடி வருகிறேன்
இலக்கிய வாழ்க்கை
அ. யேசுராஜாவின் முதலாவது சிறுகதை 'வரவேற்பு' 1968-ல் வெளிவந்தது. 'தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்' என்னும் சிறுகதைத் தொகுதியில் 1966 முதல் 1974 வரை அவர் எழுதிய 11 சிறுகதைகளில் 10 சிறுகதைகள் இடம்பெற்றன. இத்தொகுதி 1975-ம் ஆண்டு இலங்கை சாஹித்திய மண்டலத்தின் சிறுகதைக்கான பரிசைப்பெற்றது.
கவிதை
'அறியப்படாதவர்கள் நினைவாக' என்கிற கவிதைத் தொகுப்பும் வெளியாகியுள்ளது.
மொழியாக்கம்
இவர் மொழியாக்கம் செய்த கவிதைகள் 'பனிமழை' என்ற பெயரில் நூலாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.
கட்டுரை
அ. யேசுராசா தொடர்ச்சியாக ஈழத்தின் கலை இலக்கியப் போக்குகள் பற்றிய பதிவுகளையும் தனது கருத்துக்களையும் பத்திகளாகவும் கட்டுரைகளாகவும் எழுதிவந்துள்ளார். இவற்றின் தொகுப்புகள் 'பதிவுகள்', 'குறிப்பேட்டிலிருந்து', 'தூவானம்', 'நினைவுக் குறிப்புகள்' என்கிற பெயரில் வெளிவந்தன. திரைப்படங்கள் மற்றும் நாடகங்கள் குறித்து இவர் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 'திரையும் அரங்கும்: கலைவெளியில் ஒரு பயணம்' என்கிற பெயரில் 2013-ல் வெளிவந்தன.
பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்தில் வாழ்வோம், காலம் எழுதிய வரிகள் என்கிற கவிதைத்தொகுப்புகளின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் இருக்கின்ற அ. யேசுராசா, ஓவியர் மார்க்கு அவர்களின் நினைவாக வெளியிடப்பட்ட 'தேடலும் படைப்புலகமும்' என்கிற தொகுப்பின் ஆசிரியர்களில் ஒருவர். பதிப்புத்துறை சார்ந்து அலை வெளியீடு, தமிழியல் வெளியீடுகள் என்பவற்றிலும் இவரது கணிசமான பங்களிப்பு இருக்கின்றது.
1966 முதலே மரபுக் கவிதைகள் சிலவற்றை எழுதிவந்தாலும் 1968இலேயே புதுக்கவிதைகள் வடிவில் எழுதத்தொடங்கியதாகக் குறிப்பிடும் யேசுராசா தன் முதலாவது சிறுகதையான வரவேற்பையும் அதே ஆண்டிலேயேஎழுதியதாகக் குறிப்பிடுகின்றார். ஆயினும் இச்சிறுகதை 1970 இலேயே வெளியானது. அவரது முதலாவதுகட்டுரையும் கே. எஸ். சிவகுமாரன் கேட்டுக்கொண்டதன் படி 1969 இலேயே “ஒரு வாசகனின் அபிப்பிராயம்” என்கிற பெயரில் தினகரனில் செ. கணேசலிங்கம் மௌனி சிறுகதைகள் பற்றிய பிரமிளின் கட்டுரைக்கு எழுதிய விமர்சனத்துக்கான எதிர்வினையாக எழுதப்பட்டபோதும் அது – கட்டுரையை எழுதியர் பிரபலமில்லாதவர் என்ற காரணத்தால் பிரசுரத்துக்கு மறுக்கப்பட்டதால் 1971 இலேயே அக்கட்டுரை குருநகர் வளர்பிறை மன்றம் வெளியிட்ட நெய்தல் என்ற பெயரில் வெளியிட்ட மலரில் “குருநகரோன்” என்ற பெயருடன் வெளியானது. இன்றுவரை 50 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக கலை இலக்கியச் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவரும் அ. யேசுராசாவின்
அமைப்புப் பணிகள்
கொழும்பு கலை இலக்கிய நண்பர் கழகம் என்கிற அமைப்பொன்றை, 1969 இன் பிற்பகுதியில் தொடங்கினோம். இந்த அமைப்பில், நான் கொழும்பில் இருக்கும்வரை இணைந்து செயற்பட்டேன். 1971 இல் கொழும்புக்கு வெளியே நான் மாற்றலானபோதும் கூட, இந்த அமைப்புடன் தொடர்புகளைப் பேணிவந்தேன். இவ்வாறு கொழும்பில் இருந்தபோது எமக்கு
மதிப்பீடு
இன்றுவரை ஈழத்தின் கலை இலக்கிய இதழ்களுக்குச் சரியான முன்மாதிரியாக விளங்குகின்ற “அலை” இதழின்
நூல்கள்
- தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் - (சிறுகதை, மார்கழி 1974. மார்கழி 1989)
- அறியப்படாதவர்கள் நினைவாக - (கவிதை, 1984)
- பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்" - (கவிதை, 1984, 2003)
- மரணத்துள் வாழ்வோம்" - (கவிதை, 1985, 1996)
- காலம் எழுதிய வரிகள்" - (கவிதை, 1994)
- தூவானம் - (பத்தி, 2001)
- பனிமழை" - (மொழிபெயர்ப்புக் கவிதைகள், 2002)
- பதிவுகள்" - (பத்தி, 2003)
- குறிப்பேட்டிலிருந்து" - (கட்டுரைகள், 2007)
- திரையும் அரங்கும் - கலைவெளியில் ஒரு பயணம் (கட்டுரைகள் 2013)
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.