under review

இன்பகவி

From Tamil Wiki
Revision as of 16:51, 17 April 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Moved Category Stage markers to bottom)

இன்பகவி (19-ஆம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

திருச்சியிலுள்ள மணப்பாறையில் இன்பகவி பிறந்தார். இவரது இயற்பெயர் சவியார் என்றிக் லேயாம். இவர் இலங்கைக்குச் சென்று ஆபிரகாம் என்பவர் வீட்டில் தங்கியிருந்தார்.

இலக்கிய வாழ்க்கை

ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்களில் ஒருவர். தனிப்பாடல்கள் பல பாடியுள்ளார். பிலிப் ரோட்ரிகோ முத்துக்கிருஷ்ணாவைக் குறித்து குறவஞ்சி என்னும் நாடகத்தினை உருவாக்கினார்.

மறைவு

இன்பகவி 1835-ல் காலமானார்.

நூல்கள் பட்டியல்

குறவஞ்சி
  • கச்சேரி முதலியார் குறவஞ்சி
  • முத்துக்கிருட்டிணன் குறவஞ்சி
  • யாழ்ப்பாணத்துச் செல்வர் குறவஞ்சி

உசாத்துணை


✅Finalised Page