தமிழ் (இதழ்)
தமிழ் ( 1911) சென்னையில் இருந்து வெளிவந்த இதழ்.
வெளியீடு
மஹிமை தங்கிய ஐந்தாவது ஜார்ஜ் பெருமான் இந்திய சக்ரவர்த்தியாக டில்லியில் முடிசூடின நன்னாளிற் றொடங்கியது. என்கிற அறிவிப்பைத் தலைப்பிலிட்டுக்கொண்டு தொடங்கப்பட்டது. கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக என்கிற குறளை முகச்சொல் ஆகக் கொண்டது. 1911- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 -ஆம் நாள் புத்தகம் 1-எண் 1-என்கிற வரிசை முறையில் தொடங்கப்பட்டது.
உள்ளடக்கம்
தமிழ் மொழியையும், கல்வி தொடர்பான செய்திகளையும் மக்களுக்குத் தருவதற்காகத் தொடங்கப்பட்ட இதழ் இது. பத்திரிகையின் ஆண்டுச் சந்தா தபாற்செலவு உள்பட ரூ 1- என அறிவித்து, தமிழபிமானிகளையும், கல்வியாளர்களையும் பத்திரிகைக்கு உதவ அன்போடு அழைக்கிறது. மூன்று இதழ்கள் கிடைத்துள்ளது. பத்திரிகையின் முன்னும் பின்னும் சிதைந்த நிலையில் உள்ளதால் வேறு செய்திகளை அறிய முடியவில்லை (தமிழம்)
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.