under review

அவதானம் (நினைவுக்கலை)

From Tamil Wiki
Revision as of 17:51, 25 January 2022 by Santhosh (talk | contribs)

அவதானம் (கவனம்) நினைவுக்கலை என பரவலாக குறிப்பிடப்படுகிறது . ஒரே சமயத்தில் பல செயல்களைச் செய்துகாட்டும் சாதனை அவதானம் எனப்படும்.

வரலாறு

இந்த அவதானக்கலை 17ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர்தான் உருவானது. இந்த அவதானங்களைச் செய்தவர்கள் எல்லோருமே தமிழ்ப்புலவர்கள்.

வகைகள்

  • ஒரே சமயத்தில் ஆறு வகையான அவதானங்கள் செய்வது சட்டவதானம் எனப்படும்
  • ஒரே சமயத்தில் எட்டு வகையான அவதானங்கள் செய்வது அட்டாவதானம் எனப்படும்
  • ஒரே சமயத்தில் பத்து வகையான அவதானங்கள் செய்வது தசாவதானம் எனப்படும்
  • ஒரே சமயத்தில் பதினாறு வகையான அவதானங்கள் செய்வது சோடசாவதானம் எனப்படும்
  • ஒரே சமயத்தில் நூறு வகையான அவதானங்கள் செய்வது சதாவதானம் எனப்படும்

முறை

அட்டாவதானத்திற்கு இந்த அவதானங்கள், தசாவதானத்திற்கு இந்த அவதானங்கள் என எந்த வரையறையும் தெளிவாக இல்லை. பொதுவாக பல அவதானிகளால் செய்யப்பட்ட அவதானங்கள் என கீழுள்ளவற்றை குறிப்பிடலாம்:

  • ஆசுகவி பாடுதல் - பாடலின் ஈற்றடியையோ அன்றி முதற் சொல், இறுதிச் சொற்களையோ கொடுத்து உடனேயே பாசட் சொல்வதாகும்

அவதானிகள்

  • சரவணப்பெருமாள் கவிராயர், செய்குத்தம்பிப் பாவலர் போன்றோர் சதாவதானம் செய்தவர்கள்.
  • சீறாப்புராண ஆசிரியர் உமறுப்புலவரின் பேரர் அப்துல்காதர் அட்டாவதானி.
  • வினோதரசமஞ்சரி நூலாசிரியர் வீராசாமிச் செட்டியார் கூட ஓர் அவதானிதான்.

தமிழகத்தில் அவதானம் செய்தவர்களாக 160க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர்.

உசாத்துணைகள்


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.