under review

மீனாட்சிசுந்தரம்மாள்

From Tamil Wiki
Revision as of 16:17, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

மீனாட்சிசுந்தரம்மாள் ( ) தமிழின் தொடக்க கால நாவலாசிரியர்களில் ஒருவர்.

வாழ்க்கை

மீனாட்சிசுந்தரம்மாள் பிராமண குலத்தைச் சேர்ந்தவர். இவருடைய கணவர் ஆங்கிலேய அரசில் உயரதிகாரியாக பணியாற்றியவர். இவர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். National Indian Home Educational Classes என்னும் அமைப்பில் கல்வி பயின்றார். பெரும்பாலும் சென்னையில் வாழ்ந்தார். இவருடைய நாவலுக்கு லேடி பென்சன் என்னும் ஆங்கிலப்பெண்மணி முன்னுரை வழங்கியிருக்கிறார்

மீனாட்சிசுந்தரம்மாள் தன் பிராமண சமூகத்தின் பின்தங்கிய நிலையையையும் மூடநம்பிக்கைகளையும் பெண்களுக்கு எதிரான வன்முறையையும் கண்டித்து நாவல்களை எழுதினார்

நூல்கள்

  • ஜயசீலன் (1915)
  • ஸ்ரீதரன் (1932)

உசாத்துணை

  • தினமணி மதிப்புரை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:36:56 IST