under review

சோபிதா முகுந்தன்

From Tamil Wiki
Revision as of 16:02, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சோபிதா முகுந்தன் (பிறப்பு: மார்ச் 9, 1973) ஈழத்துப் பெண் எழுத்தாளர். சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

சோபிதா முகுந்தன் இலங்கை வவுனியா, தேக்கவத்தையில் முகுந்தன், தபோதினி இணையருக்கு மார்ச் 9, 1973-ல் பிறந்தார். வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றார்.

இலக்கிய வாழ்க்கை

சோபிதா முகுந்தன் 2015 முதல் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். 'தாய்' என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார். எழுத்தாளர் சோபிதாவின் 'பசும்பால் என்பது பூலோக அமிர்தம்' என்னும் கவிதை 'ஆயிரம் கவிஞர்கள் கவிதைகள்' எனும் நூலில் இடம்பெற்றது.

விருதுகள்

  • இவரின் 'தாய்' என்ற சிறுகதை தொகுப்பு நூல் 2016-ல் தேசிய இளைஞர் மன்றத்தின் விருது பெற்றது.

நூல் பட்டியல்

  • தாய் (சிறுகதைத்தொகுப்பு)
  • பசும்பால் என்பது பூலோக அமிர்தம் (கவிதை)
  • ஆரோக்கிய வாழ்வு
  • அறிவுமலை அப்துல்கலாம்
  • இலங்கையின் இன முரண்பாடுகளுக்கான தீர்வின் அவசியமும் வழிமுறைகளும் (கட்டுரை)
  • இலங்கையின் இன முரண்பாடுகளுக்கான தீர்வின் அவசியமும் வழிமுறைகளும் (கட்டுரை)
  • அன்றுதொட்டு இன்றுவரை பனையின் வகிபாகம்
  • இயற்கை அனர்த்தங்களும் அவற்றின் பாதிப்புகளும்
  • விந்தைமிகு உலகின் தோற்றமும் பரினாம வளர்ச்சியும் பற்றிய வினோதமான கற்பித்தல் (சிறுகதை)
  • முழுமையான சிறந்த தேசத்தை கட்டியெழுப்பும் கலையும் இலக்கியமும்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Jun-2024, 04:55:06 IST