under review

இரா. சர்மிளாதேவி

From Tamil Wiki
Revision as of 15:54, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
இரா. சர்மிளாதேவி

இரா. சர்மிளாதேவி (பொ.யு 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதி) ஈழத்துப் பெண் எழுத்தாளர், இதழாசிரியர், ஆய்வாளர், ஆசிரியர்.

வாழ்க்கைக் குறிப்பு

இரா. சர்மிளாதேவி இலங்கை கண்டி கலஹாவில் பிறந்தார். கலஹா ஸ்ரீஇராமகிருஷ்ணன் மத்திய கல்லூரியில் கல்வி கற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்துறையில் சிறப்புக் கலைமாணிப் பட்டம் பெற்றார். தமிழ்த்துறையில் இரு வருடங்கள் தற்காலிக விரிவுரையாளராகப் பணியாற்றினார். கண்டி திரித்துவக் கல்லூரியில் ஆசிரியையாகக் பணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

இரா. சர்மிளாதேவி கட்டுரை, கவிதை, சிறுகதை, நாடகம், விமர்சனம் ஆகியவற்றை எழுதினார். விவாதம், மேடைப்பேச்சு ஆகியவற்றில் ஈடுபட்டார். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் 'இளங்கதிர்', திரித்துவக்கல்லூரியின் இந்து மாணவர் மன்ற வெளியீடான 'சக்தி சஞ்சிகை' ஆகியவற்றுக்கு இதழாசிரியராக இருந்தார். அனைத்துலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு மலரிலும் இவரது கட்டுரை வெளிவந்தது. நாளிதழ்கள், சஞ்சிகைகள் ஆகியவற்றிலும் இவர் எழுதினார். முதுத்தத்துவமாணிக் கற்கை நெறியை மேற்கொண்டு 'மலையகத் தமிழ் நாவல்களில் சமுதாயப் பிரச்சினைகள்' என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டார். 'மலையகத் தமிழ் சஞ்சிகைகள்' என்ற ஆய்வு நூல் வெளிவந்துள்ளது.

நூல் பட்டியல்

  • மலையகத் தமழ்ச் சஞ்சிகைகள் ஓர் ஆய்வு (2009)

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Feb-2024, 08:39:00 IST