குமாரசுவாமிப் புலவர்
From Tamil Wiki
Revision as of 13:58, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
குமாரசுவாமிப் புலவர் (பொ.யு. 18-ம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர். புரந்தர நாடகத்தின் ஆசிரியர்.
வாழ்க்கைக் குறிப்பு
குமாரசுவாமிப் புலவர் இலங்கை உடுப்பிட்டி கோவிற்பற்றில் வல்லிபட்டியில் வேளாளர் மரபில் சந்திரசேகர முதலியாரின் மகனாகப் பிறந்தார். முத்துக்குமார முதலியாரின் சகோதரர். க. குமாரசுவாமி முதலியார் இவரின் மருமகன்.
இலக்கிய வாழ்க்கை
குமாரசுவாமிப் புலவர் 'புரந்தர நாடகம்' எனும் நாடக நூலை எழுதினார். அறுபத்தி நான்கு அடி கொண்ட ஓர் சிந்துடன் பல பதங்களையும் பாடினார்.
நூல்பட்டியல்
- புரந்தர நாடகம்
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
10-Aug-2023, 18:14:42 IST