முகம்மது றாபிப் புலவர்
From Tamil Wiki
Revision as of 12:04, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
முகம்மது றாபிப் புலவர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
முகம்மது றாபிப் புலவர் இலங்கை மட்டக்களப்பில் அக்கரைப்பற்று என்னும் ஊரில் சேகுமதாறு சாகிப் புலவரின் மகனாகப் பிறந்தார். வேளாண்மைத் தொழில் செய்தார்.
இலக்கிய வாழ்க்கை
முகம்மது றாபிப் புலவர் தனிப்பாடல்கள் பல பாடினார். தன் நண்பராகிய இசுமாலெவ்வை முகையதினின் மரணத்திற்குப் பின் அவரின் பிரிவு குறித்து 'முகையதின் ஒப்பாரி' பாடினார். முகம்மது றாபிப் புலவரின் பாடல்கள் தொகுக்கப்படவில்லை.
நூல் பட்டியல்
- முகையதின் ஒப்பாரி
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967, பாரி நிலையம் வெளியீடு
- ஆளுமை:முகம்மது றாபிப் புலவர், சேகுமதாறு சாகிப் புலவர்: noolaham
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
19-Oct-2023, 00:29:47 IST