தா. செல்லப்பாபிள்ளை
From Tamil Wiki
Revision as of 12:04, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
தா. செல்லப்பாபிள்ளை (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் ஆளுமை, பத்திரிக்கை ஆசிரியர்.
வாழ்க்கைக் குறிப்பு
செல்லப்பாபிள்ளை யாழ்ப்பாணத்தில் பிறந்தார். திருவனந்தபுரத்தில் பிரதம நீதியரசராகப் பணியாற்றினார். "வஞ்சி மாநகர்" ஆராய்ச்சி நூலை எழுதிய தா. பொன்னம்பல பிள்ளை இவரின் சகோதரர். யாழ்ப்பாணச் சைவபரிபாலன சபையை நிறுவியவர்களில் ஒருவர்.
இலக்கிய வாழ்க்கை
ஆங்கில இந்து சாதனப் பத்திரிகையின் முதலாவது ஆசிரியராகப் பணியாற்றினார்.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
29-May-2023, 14:17:15 IST