சித்துப்புலவர்
From Tamil Wiki
Revision as of 12:03, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
சித்துப்புலவர் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் சிற்றிலக்கியப் புலவர், வைத்தியர்.
வாழ்க்கைக் குறிப்பு
சித்துப்புலவர் யாழ்ப்பாணம், சுன்னாகத்தில் பிறந்தார். சிதம்பரப்பிள்ளை என்பது இயற்பெயர். தமிழ் இலக்கண இலக்கியங்களில் புலமை உடையவர். விஷ வைத்தியர்.
இலக்கிய வாழ்க்கை
சித்துப்புலவர் தனிப்பாடல்கள் பல பாடினார். பதிகங்கள், ஊஞ்சல்கள் போன்ற சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல் பாடினார்.
பாடல் நடை
- மயிலணி நரசிங்கர் மேல் பாடப்பட்டது
கல்லாத புல்லர் மனையணு காமற் கவியவர்மேற்
சொல்லாம னல் குர வில்லாம னித்ததந் துயர்க்கடலுள்
செல்லாம னல்ல வரந்தரு வாய்செந் திருமருவு
நில்லாய் மயிலனி வாசா விசய நரசிங்கமே
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967, பாரி நிலையம் வெளியீடு
- ஆளுமை:சித்துப்புலவர்: noolaham
- பாவலர் சரித்திர தீபகம்: அ. சதாசிவம்பிள்ளை: கொழும்பு தமிழ்ச்சங்கம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:39:26 IST