under review

தாயங்கண்ணியார்

From Tamil Wiki
Revision as of 12:02, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தாயங்கண்ணியார் சங்க காலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். இவரது ஒரு பாடல் சங்கத் தொகை நூலான புறநானூற்றில் uள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

தாயங்கண்ணியார், புலவர் தாயங்கண்ணனாரின் மனைவி.

இலக்கியவாழ்க்கை

தாயங்கண்ணியார் எழுதிய ஒரு பாடல் புறநானூற்றின் 250-ஆவது பாடலாக உள்ளது.

பாடல் வழி அறிய வரும் செய்திகள்

  • கைம்மை நோன்பை மேற்கொள்பவர்களின் வாழ்க்கையைப் பற்றிய பாடல் பாடினார்.
  • கைம்பெண்கள் ஆபரணங்கள் நீக்கி, கூந்தலை மழித்து, அல்லி அரிசி போன்ற சிற்றுணவை உண்டனர்.
  • கணவனை இழந்த பெண்ணின் வீட்டில் புதல்வன் தண்ணீரை பருகிவிட்டு பாலுக்காக அடம்பிடித்து அழும் வறுமைச் சித்திரம் காண்பிக்கப்படுகிறது.
  • கணவன் உயிருடன் இருந்தபோது நன்கு தாளித்த, வளமான துவையலோடு கூடிய உணவை அளித்து இரவலர்களை வேறு எங்கும் செல்லாமல் தடுத்து நிறுத்திய வாயிலையும், தன்னிடம் ஆதரவு தேடி வந்தவர்களின் கண்ணீரைத் துடைக்கும் குளிர்ந்த நறுமணமுள்ள பந்தலையும் உடையதாக இருந்த நிலையை எண்ணி மனைவி வருந்தும் கையறு நிலைப்பாடல்.

பாடல் நடை

புறநானூறு (250)

திணை: பொதுவியல்; துறை: தாபத துறை

குய்குரல் மலிந்த கொழுந்துவை அடிசில்
இரவலர்த் தடுத்த வாயிற், புரவலர்
கண்ணீர்த் தடுத்த தண்ணறும் பந்தர்க்,
கூந்தல் கொய்து, குறுந்தொடு நீக்கி,
அல்லி உணவின் மனைவியொடு, இனியே
புல்என் றனையால்-வளங்கெழு திருநகர்!
வான் சோறு கொண்டு தீம்பால் வேண்டும்
முனித்தலைப் புதல்வர் தந்தை
தனித்தலைப் பெருங்காடு முன்னிய பின்னே.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-May-2023, 14:27:12 IST