மந்திரத்ரயம்
From Tamil Wiki
மந்த்ரத்ரயம் (ரகஸ்யத்ரயம்) (மூன்று மந்திரங்கள். மூன்று மறைஞானங்கள்) வைணவ மரபின் முதன்மையான மூன்று மந்திரங்கள். இவை ரகசியமாக ஆசிரியரிடமிருந்து மாணவருக்குச் சொல்லப்படுவதனால் ரகஸ்யத்ரயம் என்னும் பெயரும் பெற்றன.
மந்திரங்கள்
வைணவர்களுக்கு மூன்று மந்திரங்கள் முக்கியமானவை. அவை மந்திரத்ரயம் எனப்படுகின்றன. அவை திருமந்த்ரம், த்வயம், சரமஸ்லோகம் ஆகியவை. அவற்றின் பொருளை விளக்கம் நூல் ரஹஸ்யத்ரயம். திருமந்திரம் ஓம் நமோ நாராயணாய. இந்த மந்திரங்களை பொருள்கொள்ளும் முறை இந்நூலில் பேசப்படுகிறது.
- ஶ்ரீமந்திரம். திருமந்திரம் (ஓம் நமோ நாராயணாய)
- த்வயம் (ஸ்ரீமன் நாராயண சரணவ் சரணம் பிரபத்யே ஸ்ரீமதே நாராயணாய நமஹ )
- சரமஸ்லோகம் ( சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ! அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷஇஷ்யாமி மாசுசஹ! (பகவத்கீதை) (மூன்று சரம ஸ்லோகங்கள்)
உரைகள்
மந்த்ரத்திரயம் என்னும் மந்திரங்களுக்கு பலர் உரை எழுதியுள்ளனர். பெரியவாச்சான் பிள்ளை எழுதிய விளக்கமும் பரகால நல்லான் எழுதிய ரகஸ்ய த்ரயம் என்னும் நூலும் முக்கியமானவை.
உசாத்துணை
- ரகஸ்யத்ரயம் இணையப்பக்கம்
- ரஹஸ்யத்ரயம் சுவடி காப்பகம்
- ரஹஸ்யத்ரய விவரணம் இணைய நூலகம்
- ரஹஸ்யத்ரய விவரணம், கட்டுரை
- ரஹஸ்யத்ரய விளக்கம் பெரியவாச்சான் பிள்ளை
- எம்பெருமானார் தரிசனம். ரகசியத்ரயம்
- ரகஸ்யத்ரயசாரசாரம்
✅Finalised Page