பஞ்சகால விதி

From Tamil Wiki
Revision as of 09:41, 6 June 2024 by Jeyamohan (talk | contribs)

பஞ்ச கால விதி : வைணவ மதத்தின் பாஞ்சராத்ர ஆகம மரபில் ஒரு வைணவர் ஒவ்வொரு நாளையும் செலவிடவேண்டிய நெறிமுறை

மரபு

வைணவ மதத்தில் பாஞ்சராத்ர ஆகம முறையில் ஒருவர் தன் முழுநாளையும் விஷ்ணுவின்பொருட்டு செலவிடும் முறை பஞ்சகால விதி என வகுக்கப்பட்டுள்ளது. இது பொழுதுடன் இணைந்த மதக்கடமைகளைக் குறிக்கிறது.

ஆதாரம்

பஞ்சகால விதி என்பது பாத்மசம்ஹிதையின் 13 ஆவது அத்தியாயத்தில் (காரியபாதம்) விவரிக்கப்படுகிறது. நாள் எப்படி ஐந்து காலப்பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது என்று பிரம்மன் கேட்க அவருக்கு விளக்கப்படும் வடிவில் இது சொல்லப்படுகிறது.

சடங்குகள்

அபிகமனம்
உபதானம்
இஜ்யா
ஸ்வாத்யாயம்
யோகம்

உசாத்துணை