பாஞ்சராத்ரம்
பாஞ்சராத்ரம் : வைணவ ஆகமத் தொகைநூல். தொன்மையான வைணவ வழிபாட்டு மரபு. பாஞ்சராத்ரம் என்பது வேதங்களில் இருந்து உருவான ஒரு வழிபாட்டு இயக்கமாக நீண்டகாலம் இருந்தது. நாராயணன் இதன் முதன்மைத்தெய்வம். ஒரு பாஞ்சராத்ரம் என்னும் குறிப்பிட்ட சடங்கு அல்லது குறியீடு இதன் மையம். இந்த வழிபாட்டு மரபு பின்னர் பிற வழிபாடுகளை இணைத்துக்கொண்டு விரிந்து பாஞ்சராத்ர மதமாக ஆகியது. இருநூறுக்கும் மேற்பட்ட நூல்கள் இந்த மரபில் இருந்ததாக தெரிகிறது. அவற்றில் பெரும்பகுதி அழிந்துவிட்டன. வைணவப்பெருமதம் உருவானபோது பாஞ்சராத்ரம் அதற்குள் ஒரு வழிபாட்டு முறையாக நீடித்தது. பாஞ்சராத்ர மரபில் இருந்து உருவான ஆகமநூல்களை பாஞ்சராத்ர ஆகமம் என ஒற்றை நூல்தொகையாக பிற்காலத்தில் ஒருங்கிணைத்தனர்.
பாஞ்சராத்ர இயக்கம்
பாஞ்சராத்ர இயக்கம் என்பது வேதகாலத்தில் பாஞ்சராத்ரம் என அழைக்கப்பட்ட ஒரு சடங்கில் இருந்து உருவான வழிபாட்டுமுறை. பின்னர் வைணவப் பெருமரபுக்குள் ஒரு வழிபாட்டியக்கமாக ஆகியது. முதல் சில நூற்றாண்டுக்காலம் ஒரு துணைமதம் என்னும் அளவிலேயே செயல்பட்டது என ஆய்வாளர் ஊகிக்கிறர்கள்.
தொடக்கம்
பஞ்சராத்ர என்ற சொல் கிருஷ்ண யஜூர் வேதத்தின் தைத்திரீய சம்ஹிதையில் 7.1.10 என்ற வரிகளில் உள்ளது. வேதச்சொல் தெளிவுறும்பொருட்டு ஒரு முனிவர் பாஞ்சராத்ரம் என்னும் சடங்கைச் செய்ததை அது குறிப்பிடுகிறது.
சதபதபிராமணம் (13.6) பாஞ்சராத்ரச் சடங்கின் முதன்மைத்தெய்வம் நாராயணன் என்று குறிப்பிடுகிறது.
மகாபாரதத்தின் நாராயணியப் பகுதி (மகாபாரதம் சாந்திபர்வத்தில் உள்ள நாராயணன் புகழ்பாடும் பகுதி.) ஏழு ரிஷிகளைக் குறிக்கிறது, அவர்கள் வேதச்சடங்காகிய பாஞ்சராத்ரத்தை செய்தனர். ஆனால் இப்பகுதி பின்னாளில் சேர்க்கப்பட்டது என்று ஆய்வாளர் கூறுகின்றனர்.
சொற்பொருள்
பாஞ்சராத்ரம் என்னும் சொல்லுக்கு நேர்ப்பொருள் ஐந்து இரவுகள். இச்சொல் பலவாறாக விளக்கப்படுகிறது.
- வைணவ ஆகமநூல்களில் ஒன்றாகிய நாரதீய சம்ஹிதையில் தத்துவம், முக்தி, பக்தி, யோகம், வைசாயிகம் என்னும் ஐந்து அறிவுநிலைகளைப் பற்றிப் பேசுவதனால் இப்பெயர் என்று சொல்லப்படுகிறது
- வைணவ ஆகமநூலான ஈஸ்வர சம்ஹிதையில் இந்த ஆகமம் சாண்டில்யர், ஔபாக்யானர், மஞ்சியாயனர், கௌரிகர், பாரத்வாஜர் ஆகிய ஐந்து முனிவர்களுக்குச் சொல்லப்பட்டதனால் இப்பெயர் அமைந்தது எனப்படுகிறது
- ஸ்ரீபிரசன்ன சம்ஹிதை விஷ்ணுவின் பர, வியூக, விபவ, அந்தர்யாமி, அர்ச்சை என்னும் ஐந்து நிலைகளை இந்நூல்கள் பேசுவதனால் இப்பெயர் என சொல்கிறது
தொன்மம்
நாராயணன் ஐந்து இரவுகளிலாகச் செய்த பெருவேள்வியின்படி இப்பிரபஞ்சமாக தான் மாறினார் என்ற தொன்மம் சாண்டில்ய சூத்திரங்களிலுள்ளது. நாராயணன் என்னும் முனிவரை அது குறிப்பிடுகிறது என்று ஒரு தரப்பு உண்டு (ஆக்ஸ்போர்டு தத்துவ அகராதி அவ்வாறு குறிப்பிடுகிறது) அருவமான இறையுருவகாமிய பிரம்மம் ஈஸ்வரன் என்னும் அனைத்திலும் உறையும் செயல்வடிவமாக ஆவதைப் பற்றிய கவித்துவ உருவகம் அது.
மரபு
பாஞ்சராத்ர மரபின் தொடக்கம் பொயு 2 அல்லது பொயு 3 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம். இந்த இயக்கத்தின் முதன்மைத்தெய்வம் நாராயணன். பின்னர் விஷ்ணுவின் வெவ்வேறு வடிவங்கள் இதில் இணைந்துகொண்டே இருந்தன. விளைவாக இன்று வைணவம் என அழைக்கப்படும் மதமரபு உருவாகி வந்தது. இந்தப் பரிணாமம் பொயு 11 ஆம் நூற்றாண்டில் ராமானுஜரின் காலம் வரை தொடர்ச்சியாக நிகழ்ந்தது.
பாஞ்சராத்ர இயக்கத்தின் தொன்மையான நூலாக இன்று கிடைப்பது சாண்டில்யர் (பொயு 100) எழுதிய சாண்டில்யசூத்ரங்கள். இவை நாராயண வழிபாட்டைச் சேர்ந்தவை.
பொயு 2 ஆம் நூற்றாண்டு முதலே பாஞ்சராத்ர இயக்கம் தென்னிந்தியாவில் இருந்தமைக்கான கல்வெட்டுச் சான்றுகள் கிடைக்கின்றன.
பரிபாடலில்
"செங்கட் காரி கருங்கண் வெள்ளை
பொன்கட் பச்சை பைங்கண் மாஅல்"
(மூன்றாம் பரிபாடல் : 81-82)
- என வரும் வரிகள் பாஞ்சராத்ர மரபின் நான்கு வியூகவடிவங்களை குறிப்பிடுகின்றன என வைணவ அறிஞர்கள் கருதுகின்றார்கள். (செங்கட் காரி - சிவந்த கண்களையுடைய வாசுதேவன், கருங்கண் வெள்ளை - கரிய கண்களையுடைய சங்கருடணன், பச்சையென்பது பிரத்தியும்நன் ன் பைங்கண் மால் - பசிய உடம்பினையுடைய அநிருத்தன் என்று பொருள்கொள்கின்றனர்)
அத்வைதம் மரபைச் சேர்ந்த வேந்தாந்தியான சங்கரர் பொயு 8 (9) ஆம் நூற்றாண்டில் பாஞ்சராத்ர இயக்கத்தை கண்டித்து எழுதியுள்ளார்.
ராமானுஜர் (பொயு 1017-1137) பாஞ்சராத்ர மரபையே தனக்கு உகந்ததாக முன்வைத்தார்.
தத்துவம்
பாஞ்சராத்ர மரபு ஏறத்தாழ ஆயிரமாண்டுகள் பல படிநிலைகளாக பரிணாமம் அடைந்து வந்த ஒரு தத்துவ - வழிபாட்டு முறை. வைணவ மதத்தின் அடிப்படைகளுக்கு இந்த மரபே அடித்தளமாக அமைந்தது
பரம்பொருளின் பரிணாமம்
பாஞ்சராத்ர மரபு ஒரு வேள்வி - வழிபாட்டு முறையாக வேதகாலம் முதல் இருந்திருக்கலாம். வேதத்திலும் உபநிடதங்களிலுமுள்ள தூய பிரம்மவாதத்தை மதவழிபாட்டு மரபுடன் இணைக்கும் தத்துவமாக பின்னர் வளர்ச்சி அடைந்தது.அது இறைவனை தூயபரம்பொருள் (பிரம்மம்) அனைத்திலும் உறைந்து வெளிப்பாடு கொண்ட கடவுள் (ஈஸ்வரன்) என்னும் இருநிலைகளில் உருவகிக்கிறது. பரம்பொருள் தன் வியூக வடிவங்கள் (உருவத்தோற்றங்கள்) வழியாக அறியப்படும் தெய்வமாக ஆயிற்று என அது வகுக்கிறது. அந்த கருத்துப்பரிணாமத்தை பல படிகளாக அது வளர்த்தெடுத்தது. தூயபிரம்மம் முதல் கருத்து. அந்தப் பிரம்மம் நாராயணன் என்னும் தெய்வம் என்பது அடுத்த கருத்துரு. நாராயணன் பாஞ்சராத்ர வேள்வியின் வழியாக அறியப்படும் பொருளாக ஆனார்.
நான்கு வெளிப்பாடுகள்
பரம்பொருளான நாராயணனின் அறியப்படும் வடிவங்களில் முதன்மையானவை சதுர்வியூகம் எனப்படும் நான்கு முக நாராயண வடிவங்கள். அவை
- வாசுதேவன்
- அனிருத்தன்
- சங்கர்ஷணன்
- பிரத்யும்னன்
இந்த உருவகங்கள் பின்னர் பாகவதமரபு எனப்படும் விஷ்ணுவின் அவதாரங்களை வழிபடும் வைணவ மரபுடன் இணைந்தன. வாசுதேவனே கிருஷ்ணனாகவும் சங்கர்ஷணன் பலராமனாகவும் உருவகிக்கப்பட்டார்கள். இவ்விணைப்பு வழியாக வைணவம் குப்தர்காலத்தில் ஒரு பெருமதமாக தொகுப்படைந்தது.
ஐந்து நிலைகள்
பஞ்சராத்ர மரபு பரம்பொருளின் ஐந்து நிலைகளை விளக்குகிறது. அவை முறையே
- பரம் (மிக உயர்ந்த, அறியப்பட முடியாத நிலை)
- வியூகம் (வாசுதேவன், சங்கர்ஷணன், பிரத்யும்னன், அனிருத்தன் ஆகிய நான்கு வடிவங்களில் இறைவன் வெளிப்படும் நிலை)
- விபவம் (திருமாலின் பத்து அவதாரங்கள்)
- அந்தர்யாமி (அனைத்திலும் உள்ளுறைந்திருகும் நிலை. உள்ளத்தில் திகழும் நிலை)
- அர்ச்சம் (வழிபடப்படும் சிலைகள் மற்றும் உருவங்கள்)
தனித்தன்மை
பாஞ்சராத்ர மரபின் முதல் தனித்தன்மை அதன் நெகிழ்வான இருநிலைக் கொள்கை (துவைதக் கொள்கை). ஒரேசமயம் பிரம்மம் என்னும் அறியமுடியாத தூய தத்துவ உருவகமாகவும் அறியப்படும் ஏராளமான தெய்வ உருவங்களாகவும் அது விஷ்ணுவை உருவகிக்கிறது. ஆகவே அதில் எல்லா தெய்வங்களையும் இணைத்துக்கொள்ளுதற்குரிய தத்துவக் கட்டமைப்பு அமைந்தது.
பாஞ்சராத்ர மரபு வைகானஸ மரபிலிருந்து வேறுபடுவது அது நாராயணன் என்னும் முதற்பரம்பொருளை அனைத்து மங்கலங்களும் கொண்ட நேர்நிலை வடிவமாக (சத்வ ரூபம்) மட்டுமே உருவகிக்கிறது என்பதுதான். மறைமுகச் சடங்குகளும் எதிர்நிலையம்சம் கொண்ட உருவகங்களிலும் பாஞ்சராத்ர மரபால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆகவே ராமானுஜர் பாஞ்சராத்ர மரபை விசிஷ்டாத்வைத மரபுக்கு உகந்த வைணவ வழிபாட்டு முறைமையாக முன்வைத்தார்.
பாஞ்சராத்ர ஆகமம்
வழிபாடு, ஆலய அமைப்பு ஆகியவற்றைச் சொல்லும் நூல்கள் ஆகமம் எனப்படுகின்றன. வைணவ ஆகமங்கள் வைகானஸம், பாஞ்சராத்ரம் என இரண்டு. பிற ஆகமங்கள் இப்போது கிடைப்பதில்லை. பாஞ்சராத்ர மரபு பின்னர் பாஞ்சராத்ர ஆகமம் ஆக மாறியது.
வைகானஸ ஆகமமே தொன்மையானது என்று கூறப்படுகிறது. ஸ்ரீரங்கம் ஆலயத்தில் வைகானஸ ஆகமம் பின்பற்றப்பட்டதாகவும், ராமானுஜர் அதை பாஞ்சராத்ர் முறைக்கு மாற்றியதாகவும் வைணவர்களால் கூறப்படுகிறது.
மும்மணிகள்
பாஞ்சராத்ர ஆகமத்தின் சம்ஹிதைகள் 108. இவற்றில் சாஸ்வதம், பௌஷ்கரம், ஜெயாக்கியம் ஆகியவை மூன்றும் முக்கியமானவை. இவை ரத்னத்ரயம் (மும்மணிகள்) எனப்படுகின்றன. இவையே பிற்கால ஆகமசம்ஹிதைகளுக்கு அடிப்படையானவை.
பௌஷ்கர சம்ஹிதையின் விரிவாக்கமாக பாரமேஸ்வர சம்ஹிதை உருவானது. அதிலிருந்து ஈஸ்வர சம்ஹிதை உருவானது. ஜெயாக்ய சம்ஹிதையில் இருந்து பாத்மசம்ஹிதை உருவானது. இன்று ஜெயாக்ய சம்ஹிதையின் அடிப்படையிலேயே வைணவ ஆலயங்கள் நிறுவப்பட்டு வருகின்றன.
ஸ்ரீரங்கத்தில் பாரமேஸ்வர சம்ஹிதையும், காஞ்சி வைகுண்டப்பெருமாள் ஆலயத்தில் ஜெயாக்ய சம்ஹிதையும், கர்நாடக மாநிலம் மேல்கோட்டையில் ஈஸ்வர சம்ஹிதையும், கும்பகோணம் மற்றும் திருமோரூரில் ஸ்ரீபிரசன்ன சம்ஹிதையும் பின்பற்றப்படுகின்றன
உள்ளடக்கம்
பாஞ்சாரத்ர ஆகமம் சுக்லயஜுர் வேதத்தின் ஏகாயன பிரிவை அடிப்படையாகக் கொண்டது. இதில் நாலாயிர திவ்யபிரபந்தம் ஆலயங்களில் பாடப்படுவதற்கான அனுமதி உள்ளமையால் இந்த ஆகமம் ஆழ்வார் காலத்திற்குப் பின் உருவானது எனப்படுகிறது. அப்பகுதி ராமானுஜர் காலத்திற்கு பின் இணைக்கப்பட்டது என்ற கருத்தும் உண்டு
இந்நூல் கீழ்க்கண்ட பிரிவுகளில் நெறிகளை வகுக்கிறது
ஆலயவழிபாடு
- பிராசாத (ஆலயம்)
- பிரதிமா (சிலை)
- பிரதிஷ்டா (சிலைநிறுவுதல்)
- பூஜா (வழிபாடு)
- பிராயச்சித்தம் (பிழையீடு)
- உத்ஸவம் (விழா)
- ஆசாரம் (நெறி)
- மந்திரம் (மந்திரங்கள்)
- யந்திரம் (மந்திரம் ஓதப்பட்ட பொருட்கள்)
- தீக்ஷை (நோன்பு)
தனிநபர் வழிபாடு
தனிநபர் கைக்கொள்ளவேண்டிய நெறிகளை பாஞ்சராத்ர ஆகம முறை பஞ்சகால பிரகிரியைகள் என வகுக்கிறது
- அபிகம்னா (காலைவழிபாட்டு நெறிகள்)
- உபதானா (வழிபாட்டுமுறைகள்)
- இஜ்ய- (நோன்புகள்)
- ஸ்வாத்யாயம் (மெய்யியல் கல்வி)
- யோகம் (தியானம் போன்றவை)
பாஞ்சராத்ர நூல்கள்
சாண்டில்யரின் பக்திசூத்திரங்கள் பாஞ்ச பஞ்சராத்ரா கோட்பாட்டின் ஆரம்பகால முறையான ஆய்வுகளில் ஒன்றாகும். பஞ்சராத்ரா இலக்கியம் வைணவத்தின் ஆகம நூல்களை உருவாக்குகிறது. சைவ சமயத்தைப் போலவே, இது இறையியலை முன்வைப்பது மட்டுமல்லாமல், வைணவக் கோயில்கள் கட்டும் மற்றும் சடங்குகளின் விவரங்கள், குறியீடுகள் மற்றும் நடைமுறைகளை விவரிக்கிறது. பஞ்சராத்ரா பாரம்பரியத்தின் படி, 108 சம்ஹிதைகள் உள்ளன , ஆனால் அதன் நூல்கள் 200 க்கும் மேற்பட்ட சம்ஹிதைகளை பட்டியலிடுகின்றன . பல பஞ்சராத்ரா நூல்கள் தொலைந்துவிட்டன. எஞ்சியிருக்கும் சில பஞ்சராத்ரா நூல்கள், அவற்றின் பொதுவான கவனம், இவை:
- சாஸ்வத சம்ஹிதா : தெய்வீக வெளிப்பாடுகள் ( வியூஹாஸ் ), விஷ்ணுவின் நான்காவது ஆறு அவதாரங்கள் மற்றும் வழிபாட்டு முறைகள் பற்றிய கட்டுரை
- அஹிர்புத்ன்ய சம்ஹிதா : தத்துவம், வ்யூஹ கோட்பாடு, எழுத்துக்கள் மற்றும் சடங்குகள் பற்றி விவாதிக்கிறது
- ஹயாஷிர்ஷா சம்ஹிதா : சடங்குகள் மற்றும் தெய்வங்கள்
- பத்ம சம்ஹிதா : பக்தருக்கான பஞ்சகலா பயிற்சிகள், திருவிழாக்கள் மற்றும் மந்திரங்கள்
- பௌஷ்கர சம்ஹிதா : உருவப்படம் மற்றும் வழிபாடு, சத்வத சம்ஹிதையுடன் ஒரு ரத்தினம் என்று நம்பப்படுகிறது
- மஹா சனத்குமார சம்ஹிதா : மத நடைமுறைகள் பற்றிய ஒரு பெரிய உரை
- ஈஸ்வர சம்ஹிதை : தியானம், வழிபாடு மற்றும் சடங்குகள்.
- வால்மீகி சம்ஹிதா: விசிஷ்டாத்வைதம், ராமர் மற்றும் சீதை வழிபாட்டில் முக்கியமானது.
ஆகமங்களின் பட்டியல்
பஞ்சராத்ரா நூல்கள் சம்ஹிதைகள் மற்றும் தந்திரங்கள் ஆகும், இவை இரண்டும் பொருளின் காரணமாக ஆகமமாக வகைப்படுத்தப்படுகின்றன. ஆகமங்கள் முக்கியமாக சைவ, சாக்த மற்றும் வைணவ ஆகமங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. வைஷ்ணவ ஆகமங்கள் பாஞ்சராத்ர ஆகமம் மற்றும் வைகானச ஆகமம் மற்றும் அவை பிரம்மனை நாராயணன் அல்லது விஷ்ணு என்று முடிவு செய்கின்றன . மகாபாரதம் அதன் நாராயணியப் பகுதியில் பஞ்சராத்ர தத்துவத்திற்கு சந்தா செலுத்துகிறது. ஆசிரியர் விஷ்ணுலோக் பிஹாரி ஸ்ரீவஸ்தவா கூறுகிறார், " மகாபாரதத்தின் நாராயணோபாக்யானத்தில் பஞ்சராத்ரம் விவாதிக்கப்பட்டுள்ளது . இந்த தந்திரத்தின் சாரத்தை நாரதர் நாராயண முனிவரிடமிருந்து உறிஞ்சியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது . இது ஏகாயனா என்ற வேதத்தின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 215 வரை. கபிஞ்சல சம்ஹிதையில் பாஞ்சராத்ர சம்ஹிதைகள் குறிப்பிடப்பட்டுள்ளன". சாது பரம்புருஷ்தாஸ் மற்றும் சாது ஷ்ருதிபிரகாஷ்தாஸ் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட அட்டவணையில் இருந்து வெளியிடப்பட்ட மற்றும் வெளியிடப்படாத, முழுமையான மற்றும் முழுமையடையாத சஹிதாக்களின் பட்டியலின் அடிப்படையில் சஹிதாக்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது:
- அகஸ்தியர்-சம்ஹிதா
- அனந்தாக்ய-சம்ஹிதா
- அனிருத்த-சம்ஹிதா
- அஹிர்புத்ன்யா-சம்ஹிதா
- ஆனந்த-ஸஹிதா
- ஈஸ்வர-சம்ஹிதா
- ஈஸ்வர-ஸஹிதா (Nṛsiṃhakalpa)
- உபேந்திர-ஸஹிதா
- உமா-சம்ஹிதா
- ஔபகாயன-ஸஹிதா
- கன்வ-சம்ஹிதா
- கபிஞ்சல-சம்ஹிதா
- கபில-சம்ஹிதா
- காஷ்யப-சம்ஹிதா
- காஸ்யபோத்தர-சம்ஹிதா
- Khagaprashna-saṃhitā
- ககேந்திர-ஸஹிதா
- காகேஸ்வர-சம்ஹிதா
- கஜேந்திர-ஸஹிதா
- கர்கா-சம்ஹிதா
- கோவிந்த-ஸஹிதா
- கௌதம-சம்ஹிதா
- சித்ராஷிகண்டி-ஸம்ஹிதா
- ஜெய்க்யா-சம்ஹிதா
- ஜயோத்தர-ஸஹிதா
- ஞானாமிர்தசார-சம்ஹிதா
- ஞானார்ணவ-சம்ஹிதா
- தந்திரதிலக-சம்ஹிதா
- த்ரயசதோத்தர-சம்ஹிதா
- துர்வாச-சம்ஹிதா
- Narasiṃhapadma-saṃhitā
- நளகூபர-ஸஹிதா
- நாரத-ஸஹிதா
- நாரதிய-சம்ஹிதா
- நரசிம்ஹ-சம்ஹிதா
- நாராயண-சம்ஹிதா
- பஞ்சபிரஷ்ண-ஸஹிதா
- பத்மநாப-ஸஹிதா
- பத்மோத்பவ-ஸஹிதா
- பரம-சம்ஹிதா
- பரமபுருஷ-ஸஹிதா
- பராசர-சம்ஹிதா
- பத்ம-சம்ஹிதா
- பத்ம-சம்ஹிதா-தந்திரம்
- பரமேஸ்வர-சம்ஹிதா
- பரமேஷ்த்ய-ஸஹிதா
- பாராசார்ய-சம்ஹிதா
- புராண-சம்ஹிதா
- புருஷோத்தம-ஸஹிதா
- பூர்ண-சம்ஹிதா
- பௌஷ்கர-ஸஹிதா
- பிரத்யும்ன-ஸஹிதா
- பிரஹ்லாதா-ஸஹிதா
- பாலபௌஷ்கர-ஸஹிதா
- பிரஹத்பிரம்ம-சம்ஹிதா
- Bṛspati-mahatantram
- போதயான-தந்திரம்
- பிரம்ம தந்திரம்
- பிரம்ம-சம்ஹிதா
- பாகவத-ஸஹிதா
- பரத்வாஜ-சம்ஹிதா
- பார்கவ-ஸஹிதா
- மங்கண-சம்ஹிதா
- மஹாகால-பஞ்சராத்திரம்
- மஹாலக்ஷ்மி-சம்ஹிதா
- மஹாசனத்குமார-சம்ஹிதா
- மாயாவைபவ-சம்ஹிதா
- மார்கண்டேய-சம்ஹிதா
- மகேஸ்வர-தந்திரம்
- லக்ஷ்மி-தந்திரம்
- வால்மீகி-சம்ஹிதா
- வராஹ-சம்ஹிதா
- வாமன-சம்ஹிதா
- வாயு-சம்ஹிதா
- வசிஷ்ட-ஸஹிதா
- வாசுதேவ-ஸஹிதா
- விஸ்வ-சம்ஹிதா
- விஸ்வாமித்ர-சம்ஹிதா
- விஸ்வேஸ்வர-ஸம்ஹிதா
- விஷ்ணு-தந்திரம்
- விஷ்ணு-சம்ஹிதா
- விஷ்ணுதத்வ-ஸம்ஹிதா
- விஷ்ணுதிலக-சம்ஹிதா
- விஷ்ணுமந்திர-சம்ஹிதா
- விஷ்ணுரஹஸ்ய-ஸம்ஹிதா
- விஷ்ணுசித்தாந்த-சம்ஹிதா
- விஸ்வக்சேனா-சம்ஹிதா
- விஹகேந்திர-சம்ஹிதா
- விஹகேஸ்வர-சம்ஹிதா
- Vṛddhapadma-saṃhitā
- Vaihāyasī-saṃhitā
- Vyasa-saṃhitā
- சாண்டில்ய-சம்ஹிதா
- சுகப்ரஷ்ண-சம்ஹிதா
- ஷேஷா-சம்ஹிதா
- சௌனக-ஸஹிதா
- சௌனகிய-சம்ஹிதா
- ஸ்ரீ-சாஸ்திரம்
- ஸ்ரீகலபரா-சம்ஹிதா
- ஸ்ரீதர-சம்ஹிதா
- ஸ்ரீபிரஷ்ண-சம்ஹிதா
- சங்கர்ஷண-சம்ஹிதா
- சனக-சம்ஹிதா
- சனத்-ஸஹிதா
- சனத்குமார-சம்ஹிதா
- சனந்த-ஸஹிதா
- சாத்யகி-தந்திரம்
- சாத்வத-சம்ஹிதா
- சரஸமுச்சய-ஸாஹிதா
- சாஷ்வர்த-சம்ஹிதா
- சுதர்சன-சம்ஹிதா
- ஸுபர்ணப்ரஷ்ண-ஸஹிதா
- ஹயக்ரீவ-தந்திரம்
- ஹயாஷிர்ஷா-சம்ஹிதா
- ஹம்ஸபரமேஸ்வர-ஸம்ஹிதா
- ஹிரண்யகர்ப-சம்ஹிதா
- (ஸ்ரீ)கலோத்தர-ஸஹிதா
- (ஸ்ரீமன்)நாராயண-சம்ஹிதா
உசாத்துணை
- திருக்கோவில் அமைப்பும் திருவுருவ அமைதியும் முனைவர் அம்பை மணிவண்ணன்
- ஸ்ரீபாஞ்சராத்ரம் – 03
- பாஞ்சராத்ரம் கிரியாசாரம்
- தைத்ரிய சம்ஹிதை, இணையநூலகம்
- மகாபாரதம் நாராயணீயம் விஸ்டம் லைப்ரரி
- நாரதீயசம்ஹிதை, விஸ்டம் லைப்ரரி
- ஈஸ்வர சம்ஹிதை இணையநூலகம்
- ஆகமப்பிரமாண்யம். இணையநூலகம்
- வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும் -சுவீரா ஜெயஸ்வால்
- பஞ்சகால பிரகிரியைகள். வரையறைகள்
- ஸ்ரீபாஞ்சராத்ரம் – 03
- வைணவ பாஞ்சராத்ரம் பேசும் பரிபாடல்