சுமதி குகதாசன்
From Tamil Wiki
சுமதி குகதாசன் (பிறப்பு: ஆகஸ்ட் 6, 1963) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர், ஆசிரியர்.
வாழ்க்கைக் குறிப்பு
சுமதி குகதாசன் இலங்கை யாழ்ப்பாணத்தில் வட்டுக்கோட்டையில் கார்த்திகேசு, வாலாம்பிகை இணையருக்கு ஆகஸ்ட் 6, 1963-ல் பிறந்தவர். வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையில் கல்வி கற்றார். கொழும்பில் குடும்பத்துடன்வசித்து வருகிறார். ஓய்வு பெற்ற ஆசிரியர்.
பொறுப்புகள்
- கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் அறக்கட்டளை நிதியத்தின் செயலாளர்.
இலக்கிய வாழ்க்கை
சுமதி குகதாசன் முதல் சிறுகதை அவர் உயர்தரத்தில் கல்வி கற்கும் போது ஈழநாடு பத்திரிகையில் வெளியானது. ”தளிர்களின் சுமைகள் ”, ”எதனை வேண்டுவோம்” ஆகிய இரு கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். “பிரகாசம்” என்னும் இதழின் ஆசிரியர். சுமதி குகதாசன்
நூல் பட்டியல்
கவிதைத் தொகுப்பு
- தளிர்களின் சுமைகள்
- எதனை வேண்டுவோம்
உசாத்துணை
- சுமதி குகதாசன் - நூலகம்
- தளிர்களின் சுமைகள் கவிதைத் தொகுதி மீதான ஒரு கண்ணோட்டம் - keetru
- வேண்டுதல் – எதனை வேண்டுவோம்’ கவிதை நூலை முன்வைத்து - hainalama
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.