எருமை (ஊர்)
From Tamil Wiki
எருமை என்பது சங்ககாலத்தில் வழங்கப்பட்ட ஊரின் பெயர்.
எருமை ஊர் பற்றி
- மைசூர் நாடும், அதன் தலை நகர் மைசூரும் சங்ககாலத்தில் “எருமை ஊர்” என்று அழைக்கப்பட்டது.
- எருமையூரன், பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை எதிர்த்துத் தோற்ற எழுவர் கூட்டணிப்படை அரசர்களில் ஒருவன்
- ”நாரறி நறவின் எருமையூரன்; வடுகர் பெருமை பேரிசை எருமை” என நக்கீரர் குறிப்பிட்டார்.
- எருமையூரில் அயிரியாறு ஓடியதாக சங்கப்பாடலில் குறிப்புள்ளது.
- எருமைக்குரிய நாடு குடநாடு என்றார் மாமூலனார்
சங்கப் புலவர்
எருமை வெளியனார், எருமை வெளியனார் மகனார் கடலனார் ஆகிய சங்ககாலப் புலவர்கள் இருவரில் முன்னொட்டாக எருமை ஊர் வந்துள்ளது.
உசாத்துணை
- சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை 4: புலவர் கா. கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.