சுபத்ரா கிருபாகரன்
சுபத்ரா கிருபாகரன் (பிறப்பு: அக்டோபர் 30, 1956) ஈழத்துப் பெண் நடனக்கலைஞர், நடன ஆசியர்.
வாழ்க்கைக் குறிப்பு
சுபத்ரா கிருபாகரன் இலங்கை அனுராதபுரத்தில் அக்டோபர் 30, 1956-ல் பிறந்தார். மட்டக்களப்பு திசவீரசிங்கம் சதுக்கத்தில் வசிக்கிறார்.
கலை வாழ்க்கை
சுபத்ரா கிருபாகரன் ஒரு நடன ஆசிரியர். நடன கலாமணி ம.கைலாயபிள்ளை, கீதாஞ்சலி, கே.நல்லையா, உடையார், கே.லஷ்மனன், பிரம்மஸ்ரீ என்.வீரமணி ஐயா ஆகியோரைக் குருவாகக் கொண்டவர். பரதகலாலயா நாட்டியக் கூடத்தை இவர் நடத்தி வருகிறார். இதன் வழியாக சிறந்த நடன கலைஞர்களை உருவாக்கினார்.
விருதுகள்
சுபத்ரா கிருபாகரன் பரத சூடாமணி, நாட்டியக் கலாமணி, நர்த்தன வித்தகி, நிருத்தியவாணி, நிருத்தியப்போராளி ஆகிய பட்டங்களைப் பெற்றார்.
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.