குமாரதேவர்
From Tamil Wiki
குமாரதேவர் தமிழ்ப்புலவர். கர்நாடக வீர சைவ மரபினைச் சார்ந்தவர். இவர் இயற்றிய மகாராஜா துறவு நூல் முக்கியமான படைப்பு.
வாழ்க்கைக் குறிப்பு
சாந்தலிங்க அடிகளின் சீடர். இவரது குமாரதேவர் திருமடம் துறையூர் ஆதீனத்திற்கு கட்டுப்பட்டு கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ளது. இவர் தியானம் செய்த குகை இங்கு உள்ளது. தன் ஞான குருவாக பார்வதியைக் கருதுகிறார்.
இலக்கிய வாழ்க்கை
குமாரதேவர் விருதாச்சலம் பெரியநாயகி சமேத பழமலைநாதர் மீது பாடல் பாடியுள்ளார். திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் இவரின் மாணவர். குமார தேவரின் நினைவாக போரூர் குமார ஆலயத்தினை சிதம்பர சுவாமிகள் நிறுவினார்.
நூல் பட்டியல்
- மகாராஜா துறவு
- சுத்த சாதகம்
- விஞ்ஞான சாரம்
- அத்துவிதவுண்மை
- பிரமானுபூதி விளக்கம்
- ஞானவம்மானை
- வேதாந்தத் தசாவவத்தைக் கட்டளை
- வேதாந்தத சகாரியக்கட்டளை
- வேதநெறியகவல்.
- சகச நிட்டை - 11
- பிரமசித்தியகவல்
- உபதேச சித்தாந்தக் கட்டளை
- சிவதரிசன அகவல்
- ஆகமநெறியகவல்
- பிரமானுபவ அகவல்
- சிவசமரசவாத அகவல்
உசாத்துணை
- https://www.tamilvu.org/courses/degree/a041/a0414/html/a041432.htm
- https://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0408.pdf
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.