தாமரை, இஸ்லாமிய இதழ்
From Tamil Wiki
தாமரை (1949) இலங்கையிலிருந்துவெளிவந்த வார இதழ். இஸ்லாமிய இலக்கியங்களுக்கு முதன்மையிடம் அளித்தது
வெளியீடு
எம்.முகம்மது சாலியை ஆசிரியராகக் கொண்டு 1949 முதல் இலங்கையில் இருந்து வெளிவந்தது.
உள்ளடக்கம்
இவ்விதழில் இலக்கிய ஆக்கங்களுக்கும், இலக்கிய விவரணங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. இலங்கை, வெளிநாட்டு செய்திகளையும் இது தாங்கியிருந்தது.
உசாத்துணை
- இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்