being created

சிவகௌரி புஸ்பராசன்

From Tamil Wiki
Revision as of 09:28, 17 March 2024 by Ramya (talk | contribs) (Created page with "சிவகௌரி புஸ்பராசன் == வாழ்க்கைக் குறிப்பு == (1973.12.17) மன்னாரில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை பிருந்தாவனநாதன்; தாய் ராஜராஜேஸ்வரி. ஆரம்பக்கல்வியை கௌரியம்மாள் பாடசாலையிலும் இடைநிலை...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சிவகௌரி புஸ்பராசன்

வாழ்க்கைக் குறிப்பு

(1973.12.17) மன்னாரில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை பிருந்தாவனநாதன்; தாய் ராஜராஜேஸ்வரி. ஆரம்பக்கல்வியை கௌரியம்மாள் பாடசாலையிலும் இடைநிலை, உயர்நிலைக் கல்வியை புனித சவேரியார் பெண்கள் பாடசாலையிலும் கற்றார். இளமாணிப்பட்டம் – புவியியல் சிறப்பு, முதுமாணி சமூகவியல் சிறப்பு, தேசிய தொழில் வழிகாட்டல் டிப்ளோமா என பல்வேறு கற்கைகளை நிறைவு செய்து தற்போது மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தில் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றுகிறார். அது ஒரு கனாக்காலம் என்னும் தலைப்பில் கவிதை நூலை வெளியிட்டுள்ளார். பிரதேச மற்றும் மாவட்ட மட்ட கலாசார போட்டிகளில் பங்கு பற்றி பல பரிசில்களையும் பெற்றுள்ளார் எழுத்தாளர். அத்துடன் மன்னார் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினராகவும் உள்ளார். சஞ்சிகைகள், நூல்களுகளுக்கு ஆக்கங்கள் எழுதுகின்றமையுடன் பிரதேச கலாசார பேரவையில் இணைந்து செயற்பட்டு வருகிறார். கலாசாரப் பேரவையினால் வெளியிடப்படும் மன்னார் நூல் மலர்க்குழுவில் இணைந்து பணியாற்றி வருகின்றார் இவரின் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் மன்னாரில் வெளிவரும் பல சஞ்சிகைகளிலும் மலர்களிலும் வெளிவந்துள்ளன. ஆயிரம் கவிஞர்களின் கவிதை நூலிலும் இவரின் கவிதை இடம்பெற்றுள்ளது.


தனிவாழ்க்கை

இலக்கிய வாழ்க்கை

விருதுகள்

  • மன்னார் மாவட்டத்தில் சுற்றுலாத்துறையினை ஊக்குவிக்கும் பொருட்டு முன்னெடுக்கப்பட்ட வேலைத் திட்டத்தின் கீழ் மன்னாரின் சிறப்புக்கள் தொடர்பாக இயற்றப்பட்ட பாடலுக்காக கனடா உலக பல்கலைக்கழக சேவை விருது வழங்கியது.

நூல் பட்டியல்

உசாத்துணை

  • ஆளுமை:சிவகௌரி, புஸ்பராசன்: noolaham



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.