under review

கௌசல்யா சுப்பிரமணியன்

From Tamil Wiki
Revision as of 20:36, 27 February 2024 by Logamadevi (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கௌசல்யா சுப்பிரமணியன் (20-ம் நூற்றாண்டின் பிற்பகுதி) ஈழத்துப் பெண் எழுத்தாளர்.

பிறப்பு, கல்வி

கௌசல்யா சுப்பிரமணியன் இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்தார். கனடாவிற்கு புலம் பெயர்ந்தார். இசையில் இளங்கலை, முதுகலை, ஆய்வியல் நிறைஞர், கலாநிதி பட்டங்கள் பெற்றார். இதழியல் மற்றும் பொதுசனத் தொடர்பியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். இசையில் புலமைபெற்றவர். இதழியில், நாடகவியல் துறைகளில் ஈடுபாடு கொண்டவர்.

தனிவாழ்க்கை

கௌசல்யா நா.சுப்பிரமணியனை மணந்தார். கணவர் பேராசிரியராகப் பணியாற்றினார்.

பங்களிப்பு

கௌசல்யா கனடா 'தமிழிசைக் கலாமன்றம்' என்ற பேரமைப்பின் தேர்வாளராகச் செயற்பட்டார். தமிழக பல்கலைக்கழகங்கள் பலவற்றின் முனைவர் பட்ட ஆய்வேடுகளை மதிப்பிடும் வெளிநிலைத் தேர்வாளராகப் பங்களிப்பாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

கௌசல்யா கணவரான நா.சுப்பிரமணியுனுடன் இணைந்து 'இந்திய சிந்தனை மரபு' என்ற நூலை எழுதினார். 'தமிழில் இசைப்பாடல் வகைகள் அறிவனாரின் பஞ்சமரபு நூலை மையப்படுத்திய ஒரு நுண்ணாய்வு' எனும் நூலின் ஆசிரியர்.

விருதுகள்

  • இந்திய சிந்தனை மரபு என்ற நூல் தமிழக அரசின் விருதையும், இலங்கை சாகித்திய மண்டல விருதையும் பெற்றது.

நூல் பட்டியல்

  • இந்திய சிந்தனை மரபு
  • தமிழில் இசைப்பாடல் வகைகள் அறிவனாரின் பஞ்சமரபு நூலை மையப்படுத்திய ஒரு நுண்ணாய்வு

உசாத்துணை


✅Finalised Page