being created

சப்னா ஜெய்னுல் ஆப்தீன்

From Tamil Wiki
Revision as of 22:06, 25 February 2024 by Ramya (talk | contribs)

சப்னா ஜெய்னுல் ஆப்தீன் (20-ம் நூற்றாண்டின் பிற்பகுதி) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர்.

வாழ்க்கைக் குறிப்பு

சப்னா ஜெய்னுல் ஆப்தீன் இலங்கை இறக்குவானையில் ஜெய்னுல் ஆப்தீன், நஸீமா இணையருக்குப் பிறந்தார். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் இளமாணிப் பட்டம் பெற்றார். தேசிய அபிவிருத்தி நிறுவனத்தில் உளவளத்துணை டிப்ளோமா பட்டம் பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

சப்னா ஜெய்னுல் ஆப்தீனின் முதல் நூலான ’மாயாவின் பேனா’ எனும் கவிதை தொகுப்பு 2018-ல் வெளியானது. பாடல், கவிதை, கட்டுரை, சிறுகதை எழுதுதல் பன்முகத் திறமைகளைக் கொண்ட எழுத்தாளர். இவரின் ஆக்கங்கள் இதழ்களிலும் நாளிதழ்களிலும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலும் வெளியாகியுள்ளன. இரண்டாவது நூலான ’சமுத்ராவும் அவளிசைக்கும் புல்லாங்குழலும்’ நூல் கொடகே நிறுவனத்தினால் 2018-ல் சிறந்த கையெழுத்துப் பிரதிக்கான பரிசை வென்றது. இவரின் இரண்டாவது நூல் கொடகே நிறுவனத்தினால் வெளியிடப்பட்டது.

விருதுகள்

  • கவினெழி விருது – தடாகம் கலை இலக்கிய வட்டம்
  • கவிதீபம் விருது - தடாகம் கலை இலக்கிய வட்டம்
  • கவிச்சிற்பி – கவியுலகப் பூஞ்சொலை
  • கவிவேந்தர் – கவியுலகப் பூஞ்சோலை
  • ஈழத்துக்குயில் – அமுதசுரபி அறக்கட்டளை

நூல் பட்டியல்

  • மாயாவின் பேனா
  • சமுத்ராவும் அவளிசைக்கும் புல்லாங்குழலும்

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.