under review

கிரேஸ் சடகோபன்

From Tamil Wiki
Revision as of 05:49, 17 February 2024 by Ramya (talk | contribs)

கிரேஸ் சடகோபன் (பிறப்பு: பிப்ரவரி 2, 1959) ஈழத்துப் பெண் ஆளுமை, கல்வியாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

கிரேஸ் சடகோபன் இலங்கை கொழும்பு ஹெவ்லொக் டவுனில் ஆபிரகாம் ஜோசப், எஸ்தர் காலமணி இணையருக்கு பிப்ரவரி 2, 1959-ல் பிறந்தார். கொழும்பு வெள்ளவத்தை சென் கிளேயர்ஸ் கல்லூரியில் கல்வி கற்றார். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் புவியியலை சிறப்புப்பாடமாக பயின்று இளமாணிப்பட்டத்தைப் பெற்றார். கல்வித்துறையில் பட்டப்பின் கல்வி டிப்ளோமா, பட்டப்பின் கல்வி முகாமைத்துவம் என்பவற்றிலும் பட்டம் பெற்றார்.

கல்விப்பணி

ஆசிரியராகவும் முதல்தர அதிபராகவும் நீர்கொழும்பு வலய தமிழ் மொழி பாடசாலைகளுக்கான உதவிக் கல்விப் பணியாளராக பணியாற்றினார். கல்வி அமைச்சின் தமிழ்மொழிப் பாட அலகின் உதவிக் கல்விப் பணியாளராக பத்து வருடங்களுக்கு மேல் கடமையாற்றி பாடசாலைகளில் தமிழ் மொழி பாடம் தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தினார். வலய மட்டம், அகில இலங்கை ரீதியில் தேசிய மட்ட தமிழ்த் தினப் போட்டிகளை ஆண்டுதோறும் வெற்றிகரமாக நடத்தினார். தமிழ் மொழிப் பாட பரீட்சைக்கான பாடத்திட்டங்களை மேம்படுத்தும் நோக்குடன் பல்வேறுப்பட்ட பல செயலமர்வுகளையும் நடாத்தினார். கல்வி அமைச்சின் சிறப்பு தேவையுடையவர்களுக்கான கிளையில் ஒரு வல்லுநராக செயற்பட்டார்.

இதழியல்

இலங்கை கல்வி அமைச்சின் தமிழ்மொழிப் பிரிவு வருடந்தோறும் வெளியிடும் ”கூர்மதி” எனும் இதழின் ஆசிரியராக இருந்தார். கல்வி அமைச்சியில் தொடர்ச்சியாக தமிழ் இதழ் வெளிவருவதற்கு உதவியாக இருந்தார்.

இலக்கிய வாழ்க்கை

கிரேஸ் சடகோபன் றுவர்களுக்கான புவியியல் வரலாற்றுக் கட்டுரைகள் பலவற்றை எழுதினார். விஜய் என்ற சிறுவர் பத்திரிகையில் சிங்களம், ஆங்கில கதைகள் பலவற்றை தமிழில் மொழிபெயர்த்தார். பண்டார மெருவன் (பண்டாரவைக் கொன்றவர்கள்) என்ற சிங்கள நூலைத் தமிழில் மொழி பெயர்த்தார்.

நூல் பட்டியல்

மொழிபெயர்ப்பு
  • பண்டாரவைக் கொன்றவர்கள்

உசாத்துணை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.