being created

புஷ்பராணி இளங்கோவன்

From Tamil Wiki
Revision as of 11:39, 11 February 2024 by Ramya (talk | contribs) (Created page with "புஷ்பராணி இளங்கோவன் () ஈழத்துப் பெண் எழுத்தாளர். == வாழ்க்கைக் குறிப்பு == புஷ்பராணி இளங்கோவன் யாழ்ப்பாணம் சுன்னாகம் ஏழாலையில் முத்தையாவிற்குப் பிறந்தார். திருமணத்தின் பின்னர்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

புஷ்பராணி இளங்கோவன் () ஈழத்துப் பெண் எழுத்தாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

புஷ்பராணி இளங்கோவன் யாழ்ப்பாணம் சுன்னாகம் ஏழாலையில் முத்தையாவிற்குப் பிறந்தார். திருமணத்தின் பின்னர் பிரான்ஸ் நாட்டில் கணவர் இளங்கோவனுடன் தற்பொழுது வசித்து வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

புஷ்பராணி இளங்கோவன் தமிழ்ப்பிரியா என்ற புனைபெயரில் எழுதி வருபவர். 1970ஆம் ஆண்டு முதல் எழுதி வருகிறார். சிறுகதை, நாடகம், மெல்லிசைப்பாடல், இசையும் கதையும், கவிதை ஆகியவை எழுதி வருகிறார். ஈழநாடு, சிந்தாமணி, சுடர், இந்திய சஞ்சிகைகள் இதயம் பேசுகிறது, குங்குமம், மங்கை, தினகரன், வீரகேசரி, ஈழமுரசு நாளிதழ் மல்லிகை, சிரித்திரன், கலாவல்லி, அமிர்தகங்கை ஆகியவற்றில் இவரின் ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. தொடர்ந்து இவரது ஆக்கங்கள் வெளிநாடுகளில் வெளிவரும் பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இவரது ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளது.

நூல் பட்டியல்

  • காம்பு ஒடிந்த மலர் (சிறுகதைத் தொகுப்பு)

உசாத்துணை

  • ஆளுமை:இளங்கோவன், புஷ்பராணி: nooolaham



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.