புத்தனேரி ரா. சுப்பிரமணியம்
புத்தனேரி ரா. சுப்பிரமணியம் (புத்தனேரி ஆர். சுப்பிரமணியம்; புத்தனேரி சுப்பிரமணியம்; முருகு) (அக்டோபர் 8, 1922 – ஏப்ரல் 29, 1989) கவிஞர், எழுத்தாளர், இதழாளர், நாடக ஆசிரியர், பாடலாசிரியர். பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர். தமிழக அரசின் பொதுப்பணித் துறையில் பணியாற்றினார். பல்வேறு நாடகக் குழுக்களுக்காகப் பல நாடகங்களை எழுதினார். தமிழக அரசின் பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது உள்படப் பல்வேறு விருதுகள் பெற்றார்.
பிறப்பு, கல்வி
புத்தனேரி ரா. சுப்பிரமணியம், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புத்தனேரியில், அக்டோபர் 8, 1922 அன்று, பி.வி. ராமையா – தாயம்மாள் இணையருக்குப் பிறந்தார். பள்ளிக் கல்வியை முடித்த இவர், இளங்கலைப் பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
புத்தனேரி ரா. சுப்பிரமணியம், தமிழக அரசின் பொதுப்பணித் துறையில் முதல் நிலை அலுவலராகப் பணியாற்றினார். மணமானவர்.
இலக்கிய வாழ்க்கை
புத்தனேரி ரா. சுப்பிரமணியம், பாரதிதாசன் பரம்பரைக் கவிஞராக ‘பொன்னி’ இதழில் அறிமுகமானார். பொன்னி, குயில் போன்ற இதழ்களில் கவிதைகள் எழுதினார்.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.