மணக்கால் ரங்கராஜன்
மணக்கால் ரங்கராஜன் (மணக்கால் எஸ். ரங்கராஜன்) (செப்டம்பர் 13, 1922 - பிப்ரவரி 26, 2019) கர்நாடக இசைக் கலைஞர். ராகங்கள் மற்றும் பல்லவிகளில் நிபுணத்துவம் பெற்ற இசையறிஞர். லண்டன் உள்பட பல வெளிநாடுகளுக்குச் சென்று இசைக் கச்சேரிகளை நிகழ்த்தினார். தமிழக அரசின் கலைமாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றார். மணக்கால் ரங்கராஜனின் வாழ்க்கையை எழுத்தாளர் அம்ஷன்குமார் ஆவணப்படமாகத் தயாரித்தார்.
பிறப்பு, கல்வி
மணக்கால் ரங்கராஜன், திருச்சி லால்குடியை அடுத்துள்ள மணக்காலில், செப்டம்பர் 13, 1922 அன்று, இசைக் கலைஞர் சந்தான கிருஷ்ண பாகவதர் - சீதாலக்ஷ்மி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். மணக்காலில் பள்ளி படிப்பை நிறைவு செய்தார். உயர்கல்வியை லால்குடி அரசுப் பள்ளியில் படித்தார்.
தனி வாழ்க்கை
மணக்கால் ரங்கராஜன் மணமானவர். மனைவி பத்மா ரங்கராஜன் வாய்ப்பாட்டுக் கலைஞர். மகள் பானுமதி ஹரிஹரன் வயலின் கலைஞர். மகன் மணக்கால் ஸ்ரீராம் மிருதங்க வித்வான். மருமகள், விஜி ஸ்ரீராம் தம்புராக் கலைஞர்.
இசை வாழ்க்கை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.