விஜய ராவணன்
விஜய ராவணன் (பிறப்பு: டிசம்பர் 18, 1986) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். நாவல், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார்.
வாழ்க்கைக் குறிப்பு
விஜய ராவணன் திருநெல்வேலி பாளையங்கோட்டையில் மாதவன், மீரா இணையருக்கு டிசம்பர் 18, 1986-இல் பிறந்தார். உடன்பிறந்தவர் தங்கை. பாளையங்கோட்டை சின்மையா வித்யாலையில் பள்ளிக்கல்வி கற்றார். நேஷனல் எஞினியரிங் கல்லூரியில் பொறியியலில் இளங்கலைப்பட்டம் பெற்றார்.
இலக்கிய வாழ்க்கை
விஜய ராவணனின் முதல் படைப்பு நிழற்காடு 2021-இல் வெளியானது. இவரின் படைப்புகள் திணை, அமிர்தா, கல்குதிரை, நடுகல், கணையாழி, குறி, கனலி, தமிழினி , அகழ், ஓலைச்சுவடி, வனம், அரூ, வாசகசாலை, படைப்பு, நடு, யாவரும், இருவாச்சி, காணிநிலம் ஆகிய இணைய இதழ்களில் வெளியாகின. இயந்திரவியல் பொறியாளராக, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில் பணியாற்றிவருகிறார்.
விருதுகள்
- சிறுவாணி வாசகர் மையம், குமுதம்கொன்றை, கலை இலக்கியப் பெருமன்றம், அரூ, கனலி, யாவரும் நடத்திய போட்டிகளில் விஜய ராவணனின் படைப்புகள் தேர்வாகிப் பரிசுகள் பெற்றன.
இலக்கிய இடம்
நூல் பட்டியல்
நாவல்
- பச்சை ஆமை (2023, சால்ட்)
சிறுகதைத்தொகுப்பு
- நிழற்காடு (2021, சால்ட்)
- இரட்டை இயேசு (2023, எதிர் வெளியீடு)
உசாத்துணை
- நிழற்காடு – விஜயராவணன்: எம். கோபால கிருஷ்ணன்
- விஜயராவணனின் ஆரஞர் உற்றன கண்: தமிழில் எழுதப்பெற்ற உலகக்கதை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.