ச.வி. சங்கர நாராயணன்
From Tamil Wiki
ச.வி. சங்கர நாராயணன் (பிறப்பு: மே 28, 1989) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
ச.வி. சங்கர நாராயணன் சிவகங்கையில் விஸ்வநாதன், சீதா இணையருக்கு மே 28, 1989-இல் பிறந்தார். உடம்பிறந்தவர் ஒரு சகோதரர். மணப்பாறை லட்சுமி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பயின்றார். பிஷப் ஹெபர் கல்லூரியில் வேதியியலில் இளங்கலைப்பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
ச.வி. சங்கர நாராயணன் மார்ச் 27, 2023-இல் லஷ்மியை மணந்தார்.
இலக்கிய வாழ்க்கை
ச.வி. சங்கர நாராயணனின் முதல் தொகுப்பு ”விறலி” 2022-இல் வெளியானது. இவரின் சிறுகதைகள் பதாகை, சொல்வனம், நடுகல், யாவரும், வாசகசாலை ஆகிய இதழ்களில் வெளிவந்தன.
நூல் பட்டியல்
சிறுகதைத் தொகுப்பு
- விறலி (2022)
உசாத்துணை
- சங்கரின் சிறுகதைத் தொகுதி 'விறலி': கார்த்திக் பலசுப்ரமணியன் முன்னுரை.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.