அன்பழகி கஜேந்திரா
அன்பழகி கஜேந்திரா (பிறப்பு: செப்டம்பர் 24, 1983) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர்.
வாழ்க்கைக் குறிப்பு
அன்பழகி கஜேந்திரா யாழ்ப்பாணம் வேலணையில் செப்டம்பர் 24, 1983-இல் விநாயகமூர்த்தி, இராஜேஸ்வரி இணையருக்குப் பிறந்தார். சிறுவயதியே தாய் தந்தையரை இழந்தார். போர்க்கால சூழ்நிலைக்குள் அகப்பட்டு கல்வியைத் தொடர முடியாமல் ஆனார். படைத்துறைப் பள்ளியில் கல்வி கற்றார்.
தனிவாழ்க்கை
அன்பழகி கஜேந்திரா 2006-இல் கஜேந்திராவைத் திருமணம் செய்து கொண்டார். பல தொலைக்காட்சிக் கவிதை நிகழ்ச்சிகள், வானொலிக் கவிச்சமர், கவிதை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றார்.
இலக்கிய வாழ்க்கை
அன்பழகி கஜேந்திரா இலங்கையில் வெளிவரும் பல பத்திரிகைகளில் இவரின் கவிதைகள் வெளிவந்துள்ளன. உனக்குள் நீ எனும் புதுக்கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். அன்பழகி
விருதுகள்
- கவிதாசாகரம் விருது
- கவிச்சரம் விருது
- கண்ணதாசன் விருது
நூல் பட்டியல்
கவிதைத் தொகுதி
- உனக்குள் நீ
உசாத்துணை
- ஆளுமை:அன்பழகி, கஜேந்திரா: Noolaham
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.