being created

கா.ம.வேங்கடராமையா

From Tamil Wiki

கல்வெட்டறிஞர் கா.ம.வேங்கடராமையா (ஏப்ரல் 4, 1912 - ஜனவரி 31, 1995) தமிழறிஞர். இவர் தமிழுக்கும், சமயத்துக்கும் ஆற்றிய பணிகள் ஏராளம்

தமிழறிஞரும், கல்வெட்டாய்வாளருமான

பிறப்பு,கல்வி

சென்னையை போரூர் அருகே உள்ள காரம்பாக்கத்தில் 1911-ஆம் ஆண்டு ஏப்ரல் 4-ஆம் நாள் பிறந்தார் கா.ம. வேங்கடராமையா. பெற்றோர் கா.கிருஷ்ணையா-வேங்கடசுப்பம்மாள். . சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் படித்தார். செங்கல்பட்டிலுள்ள தூய கொலம்பா உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர், தமிழ் மீது ஆர்வம் கொண்டு பி.ஓ.எல் படித்து தேர்ச்சி பெற்றார். ஆங்கிலத்தில் முதுகலைத் தேர்விலும் வென்றார்.தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பெரும்புலமையும் சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கு மொழி அறிவும் நிரம்பப் பெற்றிருந்தவர்.

சைவத் திருமுறைகளில் மிகுந்த புலமை பெற்றிருந்தார்.

தனி வாழ்க்கை

அன்னபூரணி அம்மாளை மணம் செய்து கொண்டார். வே.பசுபதி கல்லூரி முதல்வர். வே.மகாதேவன்

.

கல்விப் பணி

இவர் செங்கல்பட்டுத் தூய கொலம்பா உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும், திருப்பனந்தாள் சுவாமிநாத சுவாமிகள் செந்தமிழ்க் கல்லூரியில் முதல்வராகவும்(1947-1972), தமிழ், சமஸ்கிருதம், பிற இந்திய மொழிகளின் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வாளராகவும் (3 ஆண்டுகள்), அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் திருக்குறள் இருக்கையில் ஆய்வாளராகவும் (மூன்றரை ஆண்டுகள்), தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அரிய கையெழுத்துச் சுவடிப் புலத்தின் தலைவராகவும் (ஐந்து ஆண்டுகள்), திருவனந்தபுரம் பன்னாட்டுத் திராவிட மொழியியல் ஆய்வு நிறுவனத்தில் ஆய்வாளராகவும் அரும் பணியாற்றியுள்ளார்

1947 முதல் 1972 வரை 22 ஆஃ 25 ஆண்டுகள் திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றினார் நாளைய தமிழக ஆளுநர் தொடங்கிய தமிழ் சமஸ்கிருதம் மற்றும் இந்திய மொழிகள் ஆய்வு நிறுவனத்தில் ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் ஆராய்ச்சியாளராக இருந்தார் ஆய்வுகளைச் செய்து வந்தார் அதன் பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் திருக்குறள் இருக்கையில் மூன்றரை ஆண்டுகள் ஆராய்ச்சியாளராக பணிபுரிந்தார்

இலக்கியப் பணி

சைவ சமயத்தில் ஆழ்ந்த ஈடுபாடும் திருமுறைகளில் புலமையும் கொண்டிருந்த்தால் அவற்றை ஒட்டியே இவரது பெரும்பாலான ஆய்வுகள் அமைந்தன

1949 ல் காரைக்கால் அம்மையாரின் அற்புதத் திருவந்தாதிக்கு வேங்கடராமையா எழுதிய குறிப்புரையை காசி மடம் வெளியிட்டது.

குமரகுரபரர் மாத இதழின் நிர்வாகப் பொறுப்பாளராக 50 ஆண்டுகள் பணியற்றியுள்ளார்.

அவர் தென்னாப்பிரிக்கத் தமிழர்களுக்காக தமிழிலும் ஆங்கிலத்திலும்எழுதிய சைவத் திருமறைகள் பற்றிய நூல்களை நேடால் தமிழ் வைதீக சபை வெளியிட்டது.

கல்லெழுத்துக்களில் என்னும் நூலில் மூவேந்தர் காலங்களில் நுண்கலைகள் வளர்ந்த விதங்கள் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது

காசி மடத்தின் வெளியீடுகளுள் திருக்குறள் உரைக் கொத்துப் பதிப்புகள் பதிப்பு வரலாற்றில் குறிப்பிடத்தக்கன. திருக்குறள் உரைக்கொத்தைப் பதிப்பிக்கும்போது, வ.வே.சு.ஐயர், ரெவரண்ட் லாசரஸ்,எம்.எஸ்.பூர்ணலிங்கம் பிள்ளை போன்றோரின் ஆங்கில மொழிபெயர்ப்புகளை ஒப்பிட்டுத் தகுந்த மொழிபெயர்ப்பைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு குறளுக்கும் கீழே வெளியிட்டார்.

தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தின் மூலமாகத் திருக்குறளுக்குச் சைனர் எழுதிய உரையைப் பதிப்பித்தார். இதற்காக இவர்  சைன சமயத்தைச் சார்ந்த பலரிடமும் சென்று அச்சமயம் சார்ந்த பல செய்திகளைக் கேட்டு நன்கறிந்தா

,1981இல் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட போது அரிய கையெழுத்துச் சுவடி துறையின் முதல் தலைவராக பொறுப்பேற்று ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் வரை பணியாற்றினார்.

சத்திரபதி சிவாஜியின் காலத்திற்கு முன்பிருந்தே வரலாற்றுக் குறிப்புகள், கடிதப் போக்குவரத்து, நாட்குறிப்பு, வரவு செலவுக் கணக்குகள் முதலியன மராட்டி மொழியில் மோடி எழுத்தில் எழுதப்பட்டன. தஞ்சை சரஸ்வதி மகாலில் பாதுகாக்கப்பட்டிருந்த இருந்த மோடி ஆவணங்களை ஆராய்ந்து, மராட்டியர் காலத் தமிழக வரலாற்றை அறிவதற்கு வேங்கடராமையா ‘தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்’ என்ற ஆய்வு நூலை எழுதி, தமிழ்ப்பல்கழகத்தின் வாயிலாக வெளியிட்டதோடு மோடி ஆவணங்களையும் பதிப்பித்தார்.

போன்ஸ்லே வம்ச சரித்திரம், மெக்கன்ஸி சுவடிகள், கல்வெட்டுகள்,மோடி ஆவணங்கள் ஆகியவற்றின் உதவியுடன் தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு என்ற நூலையும் எழுதினார். இவ்விரு நூல்களும் மராட்டிய மன்னர்களின் வரலாறு, காலத்து சமுதாய வரலாறு, தஞ்சை மராட்டியர் தம் ஆட்சிக்குட்பட்ட சமுதாயத்துக்குச் செய்த நன்மைகள், கலைச் சிறப்புகள், அக்காலத்திய பழக்க வழக்கங்கள், அரசியல் நிலைமைகள் இவற்றை சித்தரிக்கின்றன.

நிறைவாக திருவனந்தபுரத்தில் உள்ள பன்னாட்டுத் திராவிட மொழியியல் கழகத்தில் பணி புரிந்தபோது தமிழகக் கையேடு என்ற நூலை எழுதினார். வரலாறறைந்த தொடக்கம் முதல் சென்ற நூற்றாண்டு இறுதி வரையான வரலாற்றுக் குறிப்புகள், நூல்கள், தலங்கள், சமயம், கலை, பண்பாடு என அனைத்தும் இந்நூலில் இனம் காட்டப்பட்டுள்ளன.

ஆய்வதே இக் கல்வெட்டில் தேவார மூவர் இலக்கிய கேணி கல்வெட்டுகளில் சோழர் கால அரசியல் தலைவர்கள் திருக்குறள் உரைக்கொத்து திருமுருகாற்றுப்படை உரைக்கொத்து திருக்குறள் குறிப்புரை பன்னிரு திருமுறைப் பதிப்பு கந்தபுராணம் திருவிளையாடற் புராண பதிப்பு தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும் தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு சிவனருள் திரட்டு நீத்தார் வழிபாடு தஞ்சை மராட்டிய மன்னர் கால மோடி ஆவணமும் தமிழாக்கமும் திருக்குறள் பரிப்பெருமாள் உரையும் அறிவுரையும் திருக்குறளும் நாலாயிர திவ்ய பிரபந்தமும் மும்மொழி வெண்பாக்களில் நாயன்மார் வரலாறு பெரியபுராணமும் திருக்குறளும் திருக்குறள் சமணர் உரை போன்ற பல நூல்களை எழுதி உள்ளார்


.மராட்டியர் கால வரலாற்றை அறிவதற்குத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் வழியாக இவர் உருவாக்கிய மராடியர் மோடி ஆவணங்கள் குறித்த நூல் புகழ்பெற்ற ஒன்றாகும்.”தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்” நூலின் வழியாக மராட்டியர் காலத் தமிழகத்தை அறியலாம்.

  • தஞ்சை மராட்டிய மன்னர்களின் வரலாற்றை, அக்காலச் சமுதாய வரலாற்றுடன் ஒருசேர ஆய்ந்து முழுமையாக வெளியிட்டவர். மராட்டியர்களின் மோடி ஆவணங்கள் அனைத்தையும் பதிப்பித்தவர்.

திருப்பனந்தாள் திருமடத்தின் சார்பில் அரிய தமிழ்நூல்கள் பல வெளிவருவதற்கும் இவர் உழைத்துள்ளார்.காசித்திரு மடத்தின் வெளியீடுகளுள் திருக்குறள் உரைக் கொத்துப் பதிப்புகள் பதிப்பு வரலாற்றில் குறிப்பிடத்தக்கன. திருக்குறள் உரைக்கொத்தைப் பதிப்பிக்கும்போது, எம்.எசு.பூரணலிங்கம் பிள்ளை, வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர், எம்.ஆர்.இராசகோபால ஐயங்கார், வ.வெ.சு.ஐயர், ரெவரண்ட் லாசரசு ஆகியோரின் ஆங்கில மொழிபெயர்ப்புகளை ஒப்பிட்டுத் தகுந்த மொழிபெயர்ப்பைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு குறளுக்கும் கீழே வெளியிட்டார்.

  • திருக்குறள் உரைக்கொத்து - ஆங்கில மொழிபெயர்ப்பு - ஆராய்ச்சி உரைகளுடன் திருப்பனந்தாள் ஸ்ரீகாசிமடத்தின் மூலம் வெளியிட்டுத் தமிழ் ஆர்வலர்களால் நன்கு அறியப்பட்டவர். திருக்குறள் ஜைனர் உரையைப் பதிப்பித்தவர்.

இறப்பு

வேங்கடராமையா 1995-ஆம் ஆண்டு சனவரி 31-ஆம் தேதி காலமானார்.

விருதுகள், சிறப்புகள்

  • சிவநெறிச் செல்வர், கல்வெட்டாராய்ச்சிப் புலவர், செந்தமிழ்க் கலாநிதி, தமிழ்மாமணி முதலிய பல பட்டங்களைச் சைவ ஆதீனங்களும், தமிழ்ச் சங்கங்களும் இவருக்கு வழங்கிச் சிறப்பித்தன.

படைப்புகள்

ஆய்வுப் பேழை02. இலக்கியக் கேணி03. கல்லெழுத்துக்களில்04. கல்வெட்டில் தேவார மூவர்05. நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்)06. சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்)07. சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா)08 சிவ வழிபாடு09 The Story of Saiva Saints10 திருக்குறள் சைனர் உரை11 திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை12 திருவருட்பாவில் பெரும்பொருட்குவியல்13 திருவருட்பாவில் பெரும்பொருட்குவியல்-திருமணவிழா மலர்14 சோழர் கால அரசியல் தலைவர்கள்15 தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு16 தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்17 A Hand Book of Tamil Nadu 6வது உலகத் தமிழ் மாநாட்டு வெளியீடு

18 தொல்காப்பியம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வ

உசாத்துணை

தமிழ்மாமணி கா.ம.வேங்கடராமையா - வலைத்தளம்

கல்வெட்டில் தேவார மூவர்- tamivu.org/library

திருப்பனந்தாள் காசி மடம்-வலைத்தளம்

கிற்று. காம்-தஞ்சை மராட்டிய மன்னர் மோடி ஆவணத் தமிழாக்கமும் குறிப்புரையும்

கல்வெட்டறிஞர் கா.ம.வேங்கடராமையா- முனைவர் இளங்கோவன் தினமணி-செப்டம்பர் 20,2012


==


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

==