being created

க.ரா. ஜமதக்னி

From Tamil Wiki
Revision as of 23:49, 2 January 2024 by ASN (talk | contribs) (Page Created by ASN)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
எழுத்தாளர் ஜமதக்னி

க.ரா. ஜமதக்னி (ஏப்ரல் 15, 1903 – மே 27, 1981) கவிஞர், எழுத்தாளர், இதழாளர், மொழிபெயர்ப்பாளர். சுதந்திரப் போராட்ட வீரர். மார்க்ஸிய அறிஞர். தமிழ்நாட்டில் பொதுவுடைமைக் கட்சியை நிறுவிய முன்னோடிகளில் ஒருவராக அறியப்படுகிறார். ஜமதக்னி மொழிபெயர்த்த பல்வேறு நூல்களுள் மார்க்ஸின் ‘மூலதனம்’ நூல் குறிப்பிடத்தகுந்த ஒன்று.

பிறப்பு, கல்வி

க.ரா. ஜமதக்னி, வட ஆற்காடு மாவட்டத்தில் (இன்றைய வேலூர் மாவட்டம்) உள்ள காவேரிப்பாக்கத்திற்கு அருகில் உள்ள கடப்பேரி என்னும் சிற்றூரில், ஏப்ரல் 15, 1903 அன்று, ராகவ நாயக்கர்–முனியம்மாள் இணையருக்குப் பிறந்தார். வாலாஜாவில் பள்ளிக் கல்வி கற்றார். வேலூர் ஊரிஸ் கல்லூரியில் இண்டர்மீடியட் கற்றார். ஆங்கிலம், சம்ஸ்கிருதம், ஹிந்தி மொழிகளைக் கற்றார்.

தனி வாழ்க்கை

க.ரா. ஜமதக்னி, பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். பின் சுதந்திர எழுத்தாளராக இயங்கினார். சுதந்திரப்போராட்ட வீராங்கனையும், கடலூர் அஞ்சலையம்மாளின் மகளுமான லீலாவதியை மணம் செய்துகொண்டார். மகன்: சிவாஜி; மகள்கள்: கிருபா, சாந்தி.

இலக்கிய வாழ்க்கை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.