Tamil Wiki:அறிவுறுத்தல்கள்
அன்றாடம் குழுஉறுப்பினர்கள் கவனத்தில் கொள்ளவேண்டியது
அ.இக்குழுவில் வெறும்பார்வையாளர்களுக்கு முற்றிலும் அனுமதி இல்லை. ஒருநாளுக்கு ஒரு பதிவு என்பது இலக்கு. இரண்டுநாட்களுக்கு ஒரு பதிவாவது தேவை. முற்றிலும் பங்களிப்பு இன்றி ஒரு வாரத்துக்கு மேல் நீடிப்பவர்கள் உடனே நீக்கப்படவேண்டும்.
ஆ.பங்களிப்பு என்பது கருத்து சொல்வது அல்ல. பதிவுகள் போடுவது, மொழியாக்கம் செய்வது, திருத்துவது, தகவல்கள் சேர்ப்பது.
இ. ஆளுக்கொரு பதிவு போட்டபின் அப்பதிவை வைத்து மதிப்பீடு செய்து பேசுவதே உகந்ததாக இருக்கும். நான் உத்தேசிக்கும் பதிவு எப்படி இருக்குமென நானே எழுதிய பதிவுகள் சான்று, மாதிரி.(எ.கா: சுந்தர ராமசாமி, அசோகமித்திரன்)
ஏற்கனவே சிலவற்றை விவரித்திருக்கிறேன் என நினைக்கிறேன். மீண்டும் எழுதுகிறேன் அ. இது விக்கிப்பீடியா போல தகவல்களை மட்டும் அளிக்கும் ஒரு டேட்டாபேஸ் அல்ல. இது கலைக்களஞ்சியம். இதற்கு ஆசிரியர்கள் உண்டு. ஆகவே கருத்துக்களும் மதிப்பீடுகளும் உண்டு. ஒட்டுமொத்தமாக இதன் ‘கருத்துக்கள்’ ஆசிரியர்களுக்குரியவை. அவர்களால் ஏற்கப்பட்டவை.. ஆ. கடுமையான கறாரான விமர்சனக்கருத்துக்களை இந்த கலைக்களஞ்சியம் சொல்லாது. எந்தக் கலைக்களஞ்சியமும் சொல்வதில்லை. ஆனால் அதில் ஒரு மதிப்பீடு இருக்கும். ஒருவரின் இடமென்ன மதிப்பென்ன என்று. இ.அதன் அடிப்படையிலேயே கலைக்களஞ்சியம் ஒருவரை பற்றி எழுதுகிறது. இன்னொருவரை தவிர்க்கிறது. ஒருவருக்கு அதிக இடம் அளிக்கிறது. இந்த ‘ரேஷியோ’ மிக முக்கியமானது. ஈ.அந்த தெரிவு ஏன் நடந்தது என்பதற்கான விளக்கமே அந்த மதிப்பீடு- பங்களிப்புக் குறிப்பு. உ.அந்த மதிப்புக்குறிப்பு பொதுவாக எதிர்மறையாக எழுதப்படக்கூடாது. ‘இவர் வணிக எழுத்தாளர் மட்டுமே’ என எழுதப்படலாகாது. ‘இவர் பொதுவாசிப்புக்கான நூல்களை எழுதியவர்’ என்று பாஸிட்டிவாகவே குறிப்பிடும்
கட்டுரை மொழி
அ. நாம் "நமக்கு" போன்ற சொற்கள் இருக்கக்கூடாது
ஆ. "என்று கூறலாம்" – என்பதுபோன்ற தோராயமான சொற்றொடர்கள் கூடாது
இ. "தற்போது" போன்ற சொற்கள் தேவையில்லை. ஏனென்றால் இது நிரந்தரமான பதிவு.
ஈ. ஆகவே "குழந்தைகளின் வயது" குறிப்பிடக்கூடாது. எவருடைய வயதும் சொல்லப்படலாகாது [பிறந்த ஆண்டு சொல்லலாம்]
உ. "இவரது", "அவருடைய" போன்ற சொற்கள் கூடுமானவரை தவிர்க்கப்படவேண்டும். திரும்பத்திரும்ப அந்த நூல் அல்லது ஆசிரியர் பெயரே பயன்படுத்தப்படவேண்டும்
ஊ. ‘முத்திரை பதித்தார்’ ‘சாதனை புரிந்தார்’ போன்ற மிகைச்சொல்லாட்சிகள், க்ளீஷேக்கள் இருக்கக்கூடாது
எ. ஏதேனும் ஒரு தகவல் இல்லாத சம்பிரதாயமான வரி இருக்கலாகாது. ‘இவருக்கு தேசப்பற்று மிகுதி’ ‘இவர் மிகக்கடுமையான உழைப்பாளி’ போன்ற வரிகள்.
ஏ.'மிகையான கிளெயிம்' இருக்கக்கூடாது. ‘தமிழிலக்கியத்தின் தலைசிறந்த’ ‘ஒப்பாரும் மிக்காரும் இல்லாத’ போன்ற வரிகள்
ஐ.விமர்சனம் என ஏதும் இருக்கக்கூடாது. ‘இவர் நாலாந்தர வணிக இலக்கியங்களையே எழுதினார்’ ‘இவருடைய படைப்புகள் வெறும் பரபரப்பு கொண்டவை’ போன்ற வரிகள் தேவையில்லை. நாம் வகுத்துக்கூறவே முற்படவேண்டும். மேலே சொன்ன கருத்தையே ‘இவர் பொழுதுபோக்கு படைப்புகளை எழுதியவர்’ ‘பொதுவாசிப்புக்குரிய நூல்களை எழுதியவர்’ என வரையறை செய்யலாம். எதிர்மறை தன்மை கலைக்களஞ்சியங்களுக்கு இருக்கலாகாது
நமது மொழிக்கொள்கை
அ. 'புதினம்', 'திங்கள்', 'அகவை' போன்ற தனித்தமிழ் சொற்கள் வேண்டாம். 'நாவல்', 'மாதம்', 'வயது' போன்றவை போதும்.
ஆ. 'பெயர்கள் தமிழ்ப்படுத்தப்படவே கூடாது'. அந்த அசட்டுப்போக்குக்கு எதிராகவே இந்த தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
கட்டுரைகளுக்கான டெம்ப்ளேட்
அ. முதலில் பெயர் [அவர்களின் நூல்களில் உள்ளபடி] ,மாற்றுப்பெயர், பிறந்த – மறைந்த ஆண்டு.
ஆ. ஆண்டுகள் 6-12-1991 என்னும் பாணியில் அமையவேண்டும். மாதங்களை முன்னால் அளிப்பது. தமிழில் மாதங்களைச் சொல்வது கூடாது
இ. அந்த ஆசிரியரைப் பற்றி வாசகர் தெரிந்துகொள்ளவேண்டிய அடிப்படை செய்திகள் முதல் பத்தியில் அமைந்திருக்கவேண்டும்.
அவை
- ஆசிரியரைப்பற்றிய ஒரு வரி அறிமுகம். அவர் யார் என்ன செய்கிறார் என்பது
- அவருடைய முக்கியத்துவம், அவருடைய பங்களிப்பு பற்றிய ஒரு வரையறை
அதாவது ஒரு வாசகர் அந்த ஒரு பத்தியை மட்டுமே படித்துவிட்டுக்கூட வெளியே செல்லலாம். வேண்டுமென்றால் தொடர்ந்து படிக்கலாம். அவர் யார் என்ன செய்தார் என்ன முக்கியத்துவம் மூன்றும் முதல் பத்தியில் இருக்கவேண்டும்
ஈ. பிறப்பு- கல்வி அடுத்த பத்தி
உ. தனிவாழ்க்கை. அதில் குடும்பம்,.தொழில்
ஊ. இலக்கியவாழ்க்கை. அதில் முதல்கதை, முதல் நூல் பாதிப்புகள் மற்றும் இலக்கியச்செயல்பாடுகள்
எ. இலக்கிய முக்கியத்துவம். இடம். அதை எழுதுபவர் தொகுத்துச் சொல்லலாம். தேவையென்றால் மேற்கோள்
ஏ. நூல்பட்டியல் [அதற்குள் நாவல்கள், சிறுகதைகள் கட்டுரைகள் தனித்தனியாக
ஒ விருதுப்பட்டியல்
ஓ. உசாத்துணை. இதில் குறைந்தபட்ச தொடர்புகள் போதும். கூடுமானவரை அச்சு நூல்கள். இணையாப்பக்க தொடுப்புகள் தேவையென்றால் மட்டும். ஏனென்றால் அவை 90 சதவீதம் காலாவதியாகிவிடும். முக்கியமான பக்கங்கள் ஒன்றிரண்டு மட்டும்போதும்
பிற
- நூல்களில் இருந்து பதிவுகள் போடும்போது ஆங்கிலம் தமிழில் இணையத்தில் தேடுங்கள். மேலும் நிறைய செய்திகள் கிடைக்கும். உதாரணமாக இன்று சாண்டில்யன் பதிவை நான் மிகவும் மேம்படுத்தினேன். காரணம் இணையத்தில் விக்ரமன் சாண்டில்யன் பற்றி பேசிய ஒரு உரை கிடைத்தது [தினமணி] அப்படி நிறைய மேலும் செய்திகள் கிடைக்கும்.
- பொதுவாகச் சிறுகதை தொகுதிகள் பற்றி தனிக்கட்டுரைகள் வேண்டாம். அவற்றை அறிமுகம் செய்ய முடியாது. அவை வெவ்வேறு தொகுதிகளாகவும் வெளிவரும். விதிவிலக்கு அறம் போன்ற ஒரே தன்மை கொண்ட கதைகள்.
- நூல்களில் முக்கியமானவை பற்றி முதலில் எழுதலாம்
- பொதுவாக புகைப்படங்கள் முகம் அண்மையில் தெளிவாக இருப்பவையாக இருக்கவேண்டும். குறைவான ரெசலூஷன் கொண்டிருக்கவேண்டும். நாம் என்சைக்ளோப்பீடியாவில் புகைப்படங்களை பார்ப்பது வேறு படங்களை சரிபார்த்துக்கொள்ளவே
- Don't cutpaste wikipedia. Rewrite it. Wiki language is poor
- This is convention followed by AK Perumal. Everyone please follow this in titles and names
"INITIAL-DOT-SPACE-NAME"
If two initials, then "INITIAL-DOT-NOSPACE-INITIAL-DOT-SPACE-NAME"
Our people who are writing storiesvand poems write a note on yourself
1.பிறந்த ஊர்
2 பிறந்த ஆண்டு, தேதி
3 பெற்றோர் பெயர்
4 கல்வி பயின்ற ஊர்கள், பள்ளிகள் கல்லூரிகள்.
5 மனைவி பெயர். மணமான ஆண்டு நாள்
6.குழந்தைகள் பெயர்
7 தொழில்
8.முதல் படைப்பு.
9 முதல் படைப்பை எழுதிய ஆண்டு, பிரசுரமான ஆண்டு
10.இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள்
11.விருதுகள்
12. நூல்பட்டியல் - [முடிந்தால்]
13அரசியல் செயல்பாடுகள் ?
பதிவுகளைப் பற்றி
அ.கையில் தரவுகள் தயாராக இருப்பவர்கள், அல்லது உடனடியாக இணையத்தில் தரவுகள் எடுக்க முடிந்த நிலையில் இருப்பவர்கள் பதிவுகளை போடலாம். ஏனென்றா; ஒரு கலைக்களஞ்சியம் பல ஆயிரம் பதிவுகள் தேவையாவது. ஒரு பதிவுக்காக நாட்கணக்கில் ஆய்வும் குறிப்புகளும் எடுத்து எழுதுவதெல்லாம் தேவை அல்ல.நடைமுறையும் அல்ல. பதிவின் தேவையானவை தரவுகள்தான். மிகப்பொதுவான கருத்துக்கள். எதையும் புதியதாகச் சொல்லி நிறுவவேண்டியது இல்லை. சுசித்ரா ஏற்கனவே சிலநேரங்களில் சில மனிதர்கள் பற்றி கட்டுரை எழுதியவர். அவர் மீண்டும் ஒரு பதிவுக்காக அதை வாசித்தால் அப்படி எத்தனை பதிவு போடமுடியும்? நமக்கு தேவை விரைவான நிறைய பதிவுகள்.
முதல் பத்தி பற்றி
ஒரு கலைக்களஞ்சியத்தின் முதல்பத்தி எப்படி இருக்கவேண்டும்
அ. ஒரு தலைப்பைப் பற்றி எதுவுமே தெரியாத ஒருவருக்கு சொல்லுவதுபோல் இருக்கவேண்டும்.
ஆ. முதல் வரி அத்தலைப்பைப் பற்றி ஒற்றை வரியில் சொல்லமுடியுமென்றால் என்ன சொல்வோமோ அதுவாக இருக்கவேண்டும். அதாவது அது ஒரு ஃபைனல் டெஃபனிஷன். உதாரணமாக பாரதியார் என்னும் தலைப்பில் ‘இவர் எட்டையபுரத்தில் பிறந்தவர்’ என்பது முதல்வரியாக இருக்கமுடியாது. ‘தமிழ்மொழியில் நவீனக்கவிதை இயக்கத்தை தொடங்கிவைத்த முன்னோடி’ என்று இருக்கலாம்.
இ தொடர்ந்து அடுத்தடுத்து அவரை வரையறை செய்யும் துணை வரையறைகள். உதா ‘தமிழில் நவீன உரைநடையை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவர். இந்திய விடுதலைப்போரில் ஈடுபட்ட போராளி. இதழியலில் மொழியையும் மரபுகளையும் உருவாக்கிய முன்னுதாரண ஆளுமை; ‘தமிழில் புதிய காலகாடத்திற்குரிய இசைப்பாடல்களை எழுதியவர்’ ‘ ‘சமூகசீர்திருத்தவாதி’ ‘பெண்கல்விக்காகவும் சாதிக்கொடுமைகளுக்கு எதிராகவும் போராடியவர்’ ‘தேசியக்கல்விக்காக வாதிட்டவர்’ இப்படி. இவை அனைத்தும். அவருடைய எல்லா முகங்களும்.
ஈ.தலைப்பில் தரவுகள் தேவையில்லை [பிறந்தநாள் தவிர] ஒரே சாதனை இருக்குமென்றால் அதைச் சொல்லலாம். உம். தமிழின் முதல்நாவலை எழுதியவர் ...போல
உ.முதல் பத்தியில் சொல்லப்பட்டவற்றுக்கான தரவுகளாகவே முழுக்கட்டுரையும் அமையவேண்டும்.
மதிப்பீட்டுக்கருத்து
- ஒரு கட்டுரையில் சொல்லப்படும் மதிப்பீட்டுக்கருத்து அதை எழுதுபவருக்கு ஏற்புடையதாக இருந்தால்போதாது. பொதுவாக அழகியல் தரப்புக்கு ஏற்புடையதாக, பாஸிட்டிவானதாக இருக்கவேண்டும். ஆகவே விவாதத்திற்குரிய கருத்துக்கள், மேற்கோள்கள் இருக்கலாகாது.
- கலைக்களஞ்சியம் என்பது அடிப்படையான மிகப்பொதுவான எல்லாராலும் ஏற்கப்பட்ட கருத்துகளையே பொதுவாகச் சொல்லவேண்டும். [ஆனால் அது ஓர் அழகியல்தரப்பாக இருக்கவேண்டும்}