தென்றல்
தென்றல் (1953-1960 ) கவிஞர் கண்ணதாசன் ஆசிரியராக இருந்த இதழ். மரபுக்கவிதைகளை வெளியிட்டது. அரசியல் சார்ந்து தீவிரமான கருத்துக்கள் வெளியாயின. இதனுழன் இணைந்து தென்றல் திரை என்னும் சினிமா இதழையும் கண்ணதாசன் நடத்தினார்.
வெளியீடு
கண்ணதாசன் சண்டமாருதம், திருமகள், முல்லை, திரைஒலி, மேதாவி ஆகிய இதழ்களை நடத்தினார். அதன்பின் 1953ல் தென்றல் இதழை தொடங்கினார். 1960ல் கண்ணதாசன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து விலகுவது வரை இதழ் வெளிவந்தது
உள்ளடக்கம்
திராவிட இயக்க ஆதரவாளராக இருந்தமையால் கடுமையான நாத்திகக் கருத்துக்களையும் அரசியல்கருத்துக்களையும் எழுதினார். தாலி அணியும் வழக்கம் தமிழர்களுக்கு உண்டா என்னும் தலைப்பில் செந்தமிழ்ச்செல்வி இதழில் வந்த விவாதங்களை ஒட்டி அதில் எழுந்த விவாதம் குறிப்பிடத்தக்கதுள்
தென்றல் 1960 வரை தொடர்ச்சியாக வெளிவந்தது. பொங்கல் மலர்களையும் வெளியிட்டிருக்கிறது. கண்ணதாசன் தென்றல் இதழில் எழுதிய கட்டுரைகள் நூலாக வெளிவந்துள்ளன
உசாத்துணை
https://www.panuval.com/kannadhaasan-thendral-katturaigal-3710029