பரவர் புராணம்
From Tamil Wiki
பரவர் புராணம் (1909) கிறித்தவ இலக்கிய நூல்களுள் ஒன்று. ’பரவை’ என்னும் கடலை ஒட்டி வாழும் பரதவர்களின் வரலாற்றையும், அவர்கள் கிறிஸ்தவ மதத்தை ஏற்றது பற்றியும் கூறுகிறது. இதனை இயற்றியவர், த. அருளப்ப முதலியார்.
பிரசுரம், வெளியீடு
பரவர் புராணம், 1909-ல் மதுரை விவேகபாது அச்சியத்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டு வெளியானது. இதனை இயற்றியவர், த. அருளப்ப முதலியார்.
நூல் அமைப்பு
பரவர் புராணம், 9 இலம்பகங்களைக் கொண்டுள்ளது. அவை,
- சிருட்டியிலம்பகம்
- கலப்பிராயவிலம்பகம்
- பலபாஷவிலம்பகம்
- இந்துமதம் வந்த விலம்பகம்
- சந்திர வம்சம் பரத வம்சமான விலம்பகம்
- சந்திர வம்சத்தார் பாண்டியரான விலம்பகம்
- பாண்டியர் பரவரான விலம்பகம்
- பரவர் கிறிஸ்துவரான விலம்பகம்
- ஜாதித் தலைவர் இலம்பகம்
இந்நூலில் 807 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.