வலம்புரி பாலசுப்பிரமணியப் பிள்ளை

From Tamil Wiki

வலம்புரி அ. பாலசுப்பிரமணிய பிள்ளை ( மறைவு 1933) வலம்புரி அ.பாலசுப்ரமணியம் தமிழறிஞர். சோழர் வரலாற்றாய்வாளர். தி.வை.சதாசிவப் பண்டாரத்தாரின் ஆசிரியர் என்னும் வகையில் அறியப்படுகிறார்.

பிறப்பு, கல்வி

பழைய தஞ்சாவூர் மாவட்டத்தில் வலம்புரி என்னும் ஊரில் அண்ணாசாமிப் பிள்ளை -சுந்தரத்தம்மாள் ஆகியோரின் மகனாகப் பிறந்தவர் அ.பாலசுப்ரமணிய பிள்ளை. தொடக்கக் கல்வியை அன்னப்பன்பேட்டை திருமடத்துச் சுவாமிகளிடம் கற்றார்.

தனிவாழ்க்கை

பாலசுப்ரமணிய பிள்ளை கும்பகோணம் உயர்நிலைப்பள்ளியில் 1899 முதல் 1932 வரை தமிழாசிரியராகப் பணியாற்றினார். தி.வை. சதாசிவ பண்டாரத்தார் இவருடைய ஆய்வுத்தோழரும் மாணாக்கருமாகத் திகழ்ந்தார்.

இலக்கியப்பணி

வை. கோவிந்தசாமிப் பிள்ளை நடத்திவந்த யதார்த்த வசனீ எந்ற இதழில் தமிழிலக்கியம், சோழர் வரலாறு, சைவம் சார்ந்த கட்டுரைகளை எழுதினார். தி. வை. சதாசிவப் பண்டாரத்தாருடன் சேர்ந்து 'பன்னிரு திருமுறை ஆசிரியர் வரலாறு' என்ற நூலை எழுதினார். குப்புசாமி ராஜீ என்பவர் வடமொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்த 'தருக்க கௌமுகி' என்ற நூலுக்கு முகவுரை எழுதியுள்ளார். கரந்தைத் தமிழ்ச் சங்கம் உருவானதற்குக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர்

மறைவு

வலம்புரி பாலசுப்ரமணிய பிள்ளை 1933 ஆம் ஆண்டு காலமானார்.

இலக்கிய இடம்

தமிழிலக்கியம், தமிழக வரலாறு, சைவம் ஆகியவற்றைப்பற்றிய தொடக்ககால ஆய்வுகளை நிகழ்த்தியவர்களில் ஒருவர். தி.வை.சதாசிவப்பண்டாரத்தாரின் ஆய்வுத்தோழராக அறியப்படுகிறார்

உசாத்துணை