திருமருகல் நடேச பிள்ளை
திருமருகல் நடேச பிள்ளை (1874-1903) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த நாதஸ்வர கலைஞர்.
இளமை, கல்வி
நாகைப்பட்டணம் மாவட்டம் திருமருகல் என்னும் ஊரில் சிவஞானம் பிள்ளை - அவயாம்பாள் இணையருக்கு 1874ஆம் ஆண்டு பிறந்தார்.
திருமருகல் மருதமுத்துப் பிள்ளையிடம் நாதஸ்வரப் பயிற்சியைத் தொடங்கினார். பின்னர் குழிக்கரை அய்யாஸ்வாமியிடம் இசைப்பயிற்சி தொடர்ந்தது.
தனிவாழ்க்கை
நடேச பிள்ளைக்கு கோவிந்தம்மாள், சாரதாம்பாள் என்னும் மூத்த சகோதரிகளும், கமலாம்பாள் என்ற தங்கையும் இருந்தனர். கோவிந்தம்மாளின் மகன்தான் திருவாவடுதுறை டி. என். ராஜரத்தினம் பிள்ளை.
நடேச பிள்ளை, சிவஞான பிள்ளையின் தமக்கை குஞ்சம்மாளின் மகள் சீதாவை மணந்தார். சீதா விரைவிலேயே காலமானார். பின்னர் தன் ஆசிரியரான குழிக்கரை அய்யாஸ்வாமியின் மகள் கௌரியம்மாளை மணந்தார்.
இசைப்பணி
தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்
திருமருகல் நடேச பிள்ளையுடன் தவில் வாசித்த கலைஞர்கள்:
மாணவர்கள்
திருமருகல் நடேச பிள்ளையின் முக்கியமான மாணவர்கள்:
மறைவு
திருமருகல் நடேச பிள்ளை 1903ஆம் ஆண்டு தன் இருபத்தியெட்டாம் வயதில் காலமானார்.
உசாத்துணை
- மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013