ம.சா. அறிவுடைநம்பி
From Tamil Wiki
ம.சா. அறிவுடைநம்பி (மனோன்மணி சாம்பசிவனார் அறிவுடைநம்பி) (மார்ச் 6, 1954 - ஜனவரி 3, 2014) எழுத்தாளர், ஆய்வாளர். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். பல ஆய்வு நூல்களை எழுதினார். அரிய நூல்கள் சிலவற்றைப் பதிப்பித்தார்.
பிறப்பு, கல்வி
மனோன்மணி சாம்பசிவனார் அறிவுடைநம்பி என்னும் ம.சா.அறிவுடைநம்பி, மார்ச் 6, 1954 அன்று, முனைவர் ச.சாம்பசிவனார் - சா.மனோன்மணி இணையருக்குப் பிறந்தார். பள்ளிக் கல்வியை நிறைவுசெய்தார். இளம் அறிவியலில் பட்டம் பெற்றார். ஆய்வு விருப்பம் கொண்டு பல ஆய்வுகளை மேற்கொண்டு, தமிழில் முதுகலை, முனைவர், முதுமுனைவர் பட்டங்களைப் பெற்றார். முதுமுனைவர் பட்ட ஆய்வேட்டைத் தமிழில் எழுதி முதன்முதல் பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
இலக்கிய வாழ்க்கை