புருடோத்தமன் கதை அல்லது கோனாட்சியின் வீழ்ச்சி
புருடோத்தமன் அல்லது கோனாட்சியின் வீழ்ச்சி ( 1930) நாரண துரைக்கண்ணன் எழுதிய நாவல். காப்பியச் சாயலுடன், பழந்தமிழ் மொழியில் எழுதப்பட்டது. வில்லியம் ஷேக்ஸ்பியரின் The Rape of Lucrece என்னும் நீள்கவிதையை தழுவி எழுதப்பட்டது.
எழுத்து, வெளியீடு
இந்நாவல் 1930ல் டி.என்.சேஷாசலம் நடத்திவந்த கலாநிலையம் என்னும் இதழில் தொடராக வெளிவந்தது. பின்னர் நூலாகியது
கதைச்சுருக்கம்
புருடோத்தமனின் மனைவி இளவரசனால் கற்பழிக்கப்படுகிறாள். அவள் அதை தன் கணவனிடம் சொல்லிவிட்டு தற்கொலைசெய்துகொள்கிறாள். புருடோத்தமன் மக்களை திரட்டி அரசனை வீழ்த்துகிறான்.
இலக்கிய இடம்
தமிழில் நாவல்கள் தோன்றிய காலகட்டத்தில் பழைய குறுங்காவியங்களுக்கும் நவீனநாவல்களுக்கும் இடைப்பட்ட வகையில் செய்யுள்நடை கொண்ட நாவல்கள் உருவாயின. பரிதிமாற்கலைஞர் எழுதிய மதிவாணன் அத்தகைய நாவல். புருடோத்தமன் அல்லது கோனாட்சியின் வீழ்ச்சியும் அத்தகைய ஒரு முயற்சி
உசாத்துணை
நாரண துரைக்கண்ணன் வாழ்க்கை வரலாறு
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.