நாற்று
From Tamil Wiki
Revision as of 18:31, 3 October 2023 by Logamadevi (talk | contribs)
நாற்று(இதழ்) (2000) ஈழத்து பெண்ணியம் சார்ந்த இருமாத இதழ்.
வெளியீடு
நாற்று இதழ் இலங்கையிலிருந்து பெண்களுக்காக வெளிவந்த இருமாத இதழ். 2000 முதல் வெளியானது. தமிழீழ பெண்கள் ஆய்வு மன்றம் இந்த இதழை புதுக்குடியிருப்பிலிருந்து வெளியீடு செய்தது.
உள்ளடக்கம்
நாற்று இதழ் பெண்ணியம் சார் இதழாக வெளியானது. சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனகள், நேர்காணல்கள் என பெண்களை முன்னிலைப்படுத்தி இவ்விதழ் வெளியானது. பெண் ஆளுமைகள், பெண்களுக்கான சட்டங்கள், அமைப்புகள், பெண்களுக்கான மருத்துவ ஆலோசனைகள், பெண்கள் பற்றிய ஆய்வுகளுக்கான முக்கியத்துவம் ஆகியவை சார்ந்த கட்டுரைகள் வெளியானது. மனுஷி, கொற்றவை, அம்புலி, ஶ்ரீகலா போன்ற கவிஞர்கள் கவிதைகள் எழுதினர்.
பங்களிப்பாளர்கள்
- கோகிலா மகேந்திரன்
- ச.கலாநிதி
- குந்தவை
- பத்மலோஜினி
- ஸாராஜோசம்
- ரூபி
- தமயந்தி
ஆவணம்
உசாத்துணை
✅Finalised Page