ஸ்ரீ பார்சுவநாதர் அம்மானை
ஸ்ரீ பார்சுவநாதர் அம்மானை (பதிப்பு: 1980), அம்மானை இலக்கிய நூல்களுள் ஒன்று. ஜைன தீர்த்தங்கரர்களுள் 23-வது தீர்த்தங்கரர், பார்சுவநாதர். இவரே, சமண சமயத்தை நிலைநிறுத்தியவராகக் கருதப்படுகிறார். இவரது வாழ்க்கையைக் கூறும் நூலே ஸ்ரீ பார்சுவநாதர் அம்மானை. இந்நூலை இயற்றியவர் திருமறுமார்பன். இதன் காலம் 19 ஆம் நூற்றாண்டு.
பிரசுரம், வெளியீடு
ஸ்ரீ பார்சுவநாதர் அம்மானை நூல், 19 ஆம் நூற்றாண்டில் தோன்றிய அம்மானை இலக்கிய நூல்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. தஞ்சை சரசுவதி மகால் நூல் நிலையம், இந்நூலை 1980-ல், பதிப்பித்தது. புலவர் வீ. சொக்கலிங்கம் இதன் பதிப்பாசிரியர்.
நூல் அமைப்பு
ஸ்ரீ பார்சுவநாதர் அம்மானை நூல், மனிதனுக்கு வேண்டத் தகாத தீய குணங்களினால் ஏற்படும் துன்பங்களையும், சத்திய வழியினால் பெற்ற உயர்நிலையையும், எளிய, இனிய நடையில் விளக்குகிறது. காப்புச் செய்யுளுடன் தொடங்கும் இந்நூலில், விருத்தங்களும் அம்மானைக் கண்ணிகளும் இடம் பெற்றுள்ளன. பொதுவாக அம்மானைப் பாடல்களில் இடம் பெறும் ‘அம்மானை’ என்ற சொற்றொடருக்குப் பதிலாக, இந்நூலில், ‘அம்மானார்’ என்று மரியாதை விளியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.