மலர்மஞ்சம்
From Tamil Wiki
தி.ஜா அதுவரை பேசாப்பொருளைப் பேசத் துணிந்திருக்கிறார். ஒரு ஆணுக்கு இரு பெண்கள் மேல் காதல் இருக்கலாம், இருவர் மேலும் இணையான காதல் இருக்கலாம் . ஒரு பெண்ணுக்கு இரு ஆண்கள் மேல் காதல் வந்தால்? பிறந்தவுடன் தன் தாய் முடிவு செய்து நிச்சயித்தவனா அல்லது தனது மனம் விரும்பும் தோழனா என்ற பாலியின் தடுமாற்றமே நாவலின் மூலக்கரு.