கனகாபிஷேக மாலை
கனகாபிஷேக மாலை (பொ.யு.1648), தமிழில் தோன்றிய முதல் இஸ்லாமியக் காப்பியம். இதனை இயற்றியவர் செய்கு நயினார் கான் என்னும் கனகக் கவிராயர். எட்டு அரசர்களின் முடிசூட்டு வரலாற்றை இந்நூல் கூறுகிறது.
நூல் தோற்றம்
‘மிஃறாஜ் மாலை’ இயற்றிய ஆலிப் புலவரை அடுத்து இஸ்லாமியர்கள் பலரும் இலக்கியப் படைப்புகளை இயற்றுவதில் நாட்டம் கொண்டனர். அந்த வகையில் செய்கு நயினார் கான் என்னும் கனகக் கவிராயர் தானும் ஒரு காப்பியத்தைப் படைக்க விரும்பினார். கனகாபிஷேக மாலை என்னும் காப்பியத்தை இயற்றி பொதுயுகம் 1648-ல் அரங்கேற்றினார்.
ஆசிரியர் குறிப்பு
செய்கு நயினார் கான் என்னும் கனகக்கவிராயர், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராஜகம்பீரம் என்னும் ஊரைச் சேர்ந்தவர். கவிச்சக்ரவர்த்திகளுக்கு எல்லாம் பொன் போன்றவர் எனப் பொருள்படும் கனகக் கவிராயர் என்ற சிறப்புப் பெயர் பெற்றார். இவர், குணங்குடி மஸ்தான் சாஹிபின் முன்னோர்களுள் ஒருவர். தேவிப்பட்டினத்தில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் அறிஞர் முல்லா ஹூஸைனின் வழி வந்தவர்.
நூல் அமைப்பு
கனகாபிஷேக மாலை 35 படலங்களைக் கொண்டது. 2,792 விருத்தப்பாக்களால் ஆனது.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.