under review

வெற்றி வேலர்

From Tamil Wiki
Revision as of 03:56, 11 September 2023 by Tamizhkalai (talk | contribs)

வெற்றி வேலர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர். சிற்றிலக்கியங்கள் இயற்றினார்.

வாழ்க்கைக் குறிப்பு

வெற்றி வேலர் இலங்கை யாழ்ப்பாணம் சாவகச் சேரியில் மீசாலையில் மாப்பாண முதலியாருக்கு மகனாகப் பிறந்தார். இருபாலை நெல்லைநாத முதலியார் இவரின் நண்பர். இலக்கண இலக்கியங்கள் கற்று, தமிழில் புலமை பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

வெற்றி வேலர் கவிதைகள் எழுதினார். வன்னியிலுள்ள செல்வர் ஒருவர் மீதும், மல்விற்கோவின் மீதும் இரு குறவஞ்சிகள் பாடினார்.

நூல் பட்டியல்

  • மல்விற்கோ குறவஞ்சி
  • வன்னியிலுள்ள செல்வர் ஒருவர் மீது பாடிய குறவஞ்சி

உசாத்துணை


✅Finalised Page