வே. கார்த்திகேய ஐயர்
வே. கார்த்திகேய ஐயர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர். சைவப்புலவர், சொற்பொழிவாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
வே. கார்த்திகேய ஐயர் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நல்லூரில் வேங்கடாசல ஐயருக்கு மகனாகப் பிறந்தார். இருபாலைச் சேனதிராய முதலியாரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களை கற்றார். தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை உடையவர். நல்லூர் ம.சரவணமுத்துப் புலவரிடம் பயின்றார்.
ஆன்மிகம்
வே. கார்த்திகேய ஐயர் வேதாந்த சித்தாந்த நூல்கள் பயின்றார். யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையிலுள்ள வைத்தீஸ்வரர் கோயில், பிற இடங்களில் நல்லூர் ஆறுமுக நாவலருடன் இணைந்து விரிவுரைகள் நிகழ்த்தினார்.
இலக்கியவாழ்க்கை
வே. கார்த்திகேய ஐயர் இ.ஜெ. ராபின்சன் பாதிரியாருக்குத் தமிழ் ஆசிரியராக இருந்தார். ராபின்சன் பாதிரியார் வண்ணார்பண்ணையில் ஆறுமுக நாவலருடன் வே. கார்த்திகேய ஐயர் செய்த சைவப் பிரசங்கங்கள் பற்றிக் குறிப்பிட்டார். வேற்பிள்ளை உபாத்தியாயரின் புலியூரந்தாதியுரைக்கு சிறப்புக்கவி வழங்கினார்.
மாணவர்கள்
- ந.ச. பொன்னம்பலப்பிள்ளை
- க. வேற்பிள்ளை
- இ.ஜெ. ராபின்சன்
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967, பாரி நிலையம் வெளியீடு
- பாவலர் சரித்திர தீபகம்: அ. சதாசிவம்பிள்ளை: கொழும்பு தமிழ்ச்சங்கம்
✅Finalised Page