being created

குறிஞ்சிப்பாட்டு

From Tamil Wiki
Revision as of 18:26, 20 February 2022 by Dr.P.Saravanan (talk | contribs)


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.


குறிஞ்சிப்பாட்டு என்பது, சங்க இலக்கிய பத்துப்பாட்டு நூல்களுள் எட்டாவதாக அமைந்துள்ளது. புலவர் கபிலர் ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் மக்களின் அக ஒழுக்கம் சார்ந்த பண்பாட்டினை விளக்குவதற்காகப் பாடியது. இது 261 அடிகளை உடையது.

புலவர் அறிமுகம்

குறிஞ்சிப்பாட்டைப் பாடியவர் புலவர் கபிலர். சங்க இலக்கியப் பாடல்களில் மிகுதியான பாடல்கள் கபிலர் இயற்றியவையே. இவர் பாடிய அகப்பாடல்கள் 197. நற்றிணை 20, குறுந்தொகை 29, ஐங்குறுநூறு(குறிஞ்சி) 100, பதிற்றுப்பத்து (ஏழாம்பத்து) 10, அகநானூறு 18, புறநானூறு 28, குறிஞ்சிப்பாட்டு 1, கலித்தொகை (குறிஞ்சிக்கலி) 29. இவற்றுள் குறிஞ்சித்திணை சார்ந்த பாடல்கள் மட்டுமே 193 இருக்கின்றன.

கபிலர் அகப்பாடல்களை மட்டும் பாடுவதில் வல்லவர் அல்லர். புறப்பாடல்களைப் புனைவதிலும் வல்லவர்தான். புறநானூற்றிலே 28 பாடல்களும், பதிற்றுப்பத்தில் பத்துப்பாடல்களும் என 38 புறப்பாடல்கள் இவருடையன.

கபிலரால் பாடப்பெற்ற மன்னர்கள் செல்வக் கடுங்கோ வாழியாதன், அகுதை,அந்துவன், ஆரிய அரசன் பிரகதத்தன், இருங்கோவேள், எவ்வி, ஓரி, காரி, நள்ளி, பாரி,பேகன், விச்சிக்கோன், பொறையன் போன்றோர். இவர்களைத் தவிர பாரி மகளிர்,கழாத்தலையார் மற்றும் பேகனின் மனைவி கண்ணகியும் அவரின் கவிதைவரிகளுக்குள் கால் பதித்தவர்கள்.

கபிலர், செல்வக் கடுங்கோ வாழியாதனைப் பதிற்றுப்பத்து ஏழாம்பத்தில் சிறப்பித்துப் பாடியதால், அம்மன்னன் இவருக்கு நூறாயிரம் கானம் (நூறாயிரம் பொற்காசும்) வழங்கினான். ‘நன்றா என்றும் குன்றேறி நின்று கண்ணில் கண்ட நாடெல்லாம் காட்டிக் கொடுத்தான்’ என்று ஏழாம்பத்தின் பதிகம் தெரிவிக்கிறது.

நிலம் அறிமுகம்

மலையும் மலைசார்ந்த நிலமும் குறிஞ்சி நிலம். குளிர்காலமும் யாமப்பொழுதும் குறிஞ்சி நிலத்துக்கு உரியன. காதலர் புணர்ச்சி பற்றிக் கூறுவது குறிஞ்சித் திணைக்கு உரிய பொருள். குறிஞ்சி நிலத்தின் தெய்வம் முருகன். இந்தக் குறிஞ்சிப்பாட்டின் களம் குறிஞ்சிநிலமாகும். இந்த நூலில் காதலர் வாழ்ந்த மலைநிலத்தில் பூத்திருந்த 96 வகையான பூக்கள் கூறப்பட்டுள்ளன. தலைவி தன் தோழிமாருடன் இணைந்து அந்தப் பூக்களைப் பறித்துப் பாறைமீது குவித்து விளையாடியதாக இந்தப் பாடலில் குறிப்பு இடம்பெற்றுள்ளது.

பா வகை அறிமுகம்

குறிஞ்சிப்பாட்டு தமிழ் இலக்கணம் வகுத்தள்ள நால்வகைப் பாக்களுள் ஆசிரியப்பாவினால் அமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியப்பாவுக்குத் தனிச் சிறப்பு உண்டு. இலக்கணக் கட்டுக்கோப்புகள் குறைவாக அமைந்து, கவிஞரின் மனப்போக்குக்கும் மொழிவழி வெளியீட்டுக்கும் இடைவெளி ஏற்படாதபடி அவருக்கு மிகுதியான உரிமையை வழங்குவது ஆசிரியப்பாவே ஆகும். இது அகவற்பா எனவும் வழங்கும். சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், மணிமேகலை,பெருங்கதை போன்ற காப்பியங்கள் ஆகியவற்றில் பெருமளவு இடம் பெற்றிருப்பது ஆசிரியப்பாவே ஆகும்.

துறைகள் அறிமுகம்

அறத்தொடு நிற்றல், வரைவு கடாவுதல், இற்செறிப்பு, இரவுக்குறி, குறிஞ்சியைப் போற்றல், குறிகேட்டல், தினைப்புனம் காத்தல் முதலியன குறிஞ்சித் திணைக்குச் சிறப்புச் சேர்க்கும் நிகழ்வுகள் ஆகும். அறத்தொடு நிற்றல், வரைவு கடாவுதல் ஆகிய இரண்டு துறைகளும் குறிஞ்சித் திணைக்குத் துணை நிற்கின்றன.

261 அடிகளை உடைய குறிஞ்சிப்பாட்டு அறத்தொடு நிற்றல் துறையில் அமைந்துள்ளது. தோழி செவிலித்தாய்க்குக் கூறும் கூற்றாக இப்பாட்டு அமைந்துள்ளது. குறிஞ்சிப்பாட்டின் முதல் அடி அறத்தொடு நிற்க விரும்பும் தோழி செவிலித்தாயின் கவனத்தைத் தன்முகமாகத் திருப்பப் பேசும் பேச்சுத் தொடக்கம். தன்னை நோக்கித் திரும்புபவள் தன் சொல்லின் உண்மையை நோக்கித் திரும்புவாள் என்று தோழி நம்புகிறாள்.

தினைப்புனம் காக்குமாறு செவிலி தலைவியையும் தோழியையும் அனுப்பிய ஒருநாள், தலைவியை நோக்கி வந்த சினம் கொண்ட யானையிடமிருந்து தலைவன் காப்பாற்றியதையும், அன்று முதல் அவர்களுக்கிடையே தோன்றிய காதலையும், தலைவன் தலைவியை மணந்து கொள்வதாக அருவிநீர் உண்டு வாக்குறுதி (சத்தியம்) அளித்ததையும், அவன் அழகையும், பண்புகளையும், குடும்ப வளத்தையும் எல்லாம் விரிவாகக் கூறிச் செவிலியின் மனம், காதலர் காதலுக்கு ஆதரவாக இசையும் வகையில் முயற்சி செய்கிறாள் தோழி.

நூல் சுருக்கம்

தலைவனைக் கண்ட நாள் முதலாய் தலைவியின் உள்ள வாட்டம் உடல்வாட்டமாய் மாற, இதுகண்ட செவிலியும் மனம் கொண்ட மகளின் மாற்றம் அறியமற்றோரை வினவுகின்றாள். தெய்வம் வேண்டிப் பரவுகின்றாள்; நோய் தீரவேண்டுகின்றாள்; பார்க்கின்றாள் தோழி; இது தான் தருணம் என்று நினைக்கின்றாள்; தலைவியின் அல்லலை அன்னையிடம் அமைதியாகச் சொல்லுகின்றாள்.

அன்னையின்மனம் அரற்றாது, ஆர்ப்பரிக்காது, வெதும்பாது விம்பாது இருக்க எப்படி எப்படி கூறவேண்டுமோ, அப்படி மெல்ல மெல்ல வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் ஏற்றுகின்றாள்; ‘நான் சொல்லுவது கசப்பான உண்மை. கேட்டதும் உனக்குக் கோபம்வரும்; ஆனால் சினத்தைப் பொறுத்துக் கொள் அம்மா’ என்கின்றாள்.

அம்மா நீயும் தலைவியின் நோய்க்குக் காரணம் புரியாமல் வருந்துகின்றாய். தலைவியோ உள்ளத் துயரை உரைக்க முடியாமல் உழலுகின்றாள். நானும்தலைவியிடம் கேட்டேன்.

அவளும் சொன்னாள்; ‘நான் தலைவனோடு கொண்டகாதலை வெளியிட்டால் நம் குடிக்கு பழி ஏற்படுமோ? மனதிலே நினைத்தவனை ஊரறிய மணம் செய்து கொடுக்கவில்லையானால், மறுபிறவியிலேனும் அவனும்நானும் ஒன்று சேருவோம்’ என்று கூறி கண் கலங்கினாள்.

நானும் உன்னிடம் சொல்லஅஞ்சுகின்றேன். எனினும் உன் சம்மதமில்லாமல் நாங்கள் தேர்ந்தெடுத்த ஏமம் சால் அருவினையாகிய இச்செயலைத் தெளிவாகச் சொல்லிவிடுகிறேன்.

தினைப்புனம் காப்பதற்கு எம்மை அனுப்பினாய். நாங்களும் தினைப்புனம்காவலை ஒழுங்காகச் செய்தோம். உச்சிப்பொழுதில் அருவியில் ஆடினோம். பலமலர்களைத் தேடிப் பிடித்து பறித்து வந்து பாறையில் குவித்துத் தழையாடைதொடுத்தோம்.

தலையிலே சூடினோம். இப்படியாக அசோக மர நிழலில் இளைப்பாறி இருந்தோம். காளையொருவன் வந்தான்; கண்கவரும் வனப்பினன்; கையிலே வில்; காலிலே கழல்; அவனோடு வேட்டை நாய்களும் வந்தன; அவை கண்டு அஞ்சிவேற்றிடம் செல்ல முனைந்தோம்; எம்மருகில் வந்தான் அவன்;

இன்சொல் பேசி எம்மெல்லியல்பு புகழ்ந்தான்; எம்மிடமிருந்து தப்பிச் சென்ற விலங்குகள் திசை தப்பிஇவ்விடம் வந்தனவோ என்று வினாவினான். நாங்கள் அமைதியாக இருந்தாம்; தப்பிப்போனதின் தடம் காட்டாவிடினும் மறுமொழியேனும் பேசக் கூடாதா என்றான். அந்நேரம் கானவர் விரட்டிய யானை ஒன்று எம்மை நோக்கி ஓடி வந்தது. நாங்களும்பயந்து, மயில் போல் நடுங்கி அவன் பக்கலில் நெருங்கினோம். அவனோ, யானையின்மேல் அம்பெய்தான். அம்பு தைத்த யானை வந்தவழி பார்த்து போயிற்று.

யானை போனாலும் எம் நடுக்கம் தீரவில்லை. நடுக்கத்துடன் நின்றிருந்தோம். அவன் தலைவியைப் பார்த்து, ‘அஞ்சாதே, உன் அழகை நுகர்வேன்’ என்றான். என்னையும் நோக்கி முறுவலித்தான். தலைவியைத் தன் மார்போடு அணைத்துக்கொண்டான். ‘உன்னை என் இல்லக்கிழத்தியாக ஏற்றுக் கொள்வேன் பிரிதலும் இலேன்’என்று கூறி மலையுறை தெய்வத்தின் முன்னிலையில் தலைவியிடம் உறுதியளித்தான். அருவி நீரை அள்ளிப் பருகி ஆணையிட்டான்.

மாலை நேரமும் வந்தது. இருவரும் பிரிய வேண்டிய கட்டாயம், தன்னைப்பிரிதற்குத் தலைவி வருந்துவாள் என்பது தலைவனுக்கும் தெரியும். அதனால் ‘சிலநாட்களிலே உன்னை நாடறிய மணம் செய்வேன். அதுவரை பொறுத்திரு’ என்று ஆறுதல் சொல்லி ஆற்றுவித்தான்.

அவன் உயர்க்குடியில் பிறந்தவன்; வாய்மை தவறாதவன்; தலைவியை மணந்து கொள்ளும் விருப்பமுடையவன்; இத்தகு நல்லியல்பினனாகிய தலைவன், எம்மைப் பிரிய மனமின்றி நம் ஊருணிக்கரை வரை வந்தான்; பின்னர்அகலா காதலோடு அகன்று சென்றான். அதுநாள் முதல் தலைவியைக் காண இரவிலேவருகின்றான். அவன் இரவில் வரும் இடர் எண்ணி இவளும் (தலைவியும்) கலங்குகின்றாள். இதுதான் அவள் நோய் என்று உண்மை உரைத்தாள் தோழி!




[[Category:Tamil Content]]