சவுந்தரநாயகம்பிள்ளை
சவுந்தரநாயகம்பிள்ளை (பொ.யு 19-ஆம் நூற்றாண்டு) ஈழத்து எழுத்தாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
சவுந்தரநாயகம் பிள்ளையின் இலங்கை யாழ்ப்பாணம் ட்டுக்கோட்டையில், பழைய வட்டுக்கோட்டைச் சாத்திரசாலையில் ஆசிரியரான கபிரியேல் திரேசாவின் மகனாகப் பிறந்தார். இவரது தாயார் யாழ்ப்பாணத்திலிருந்த ஒந்தாச்சியார் என்பவரின் மகள். வட்டுக்கோட்டை சாத்திரசாலையில் கல்வி பயின்றார். சென்னைக்குச் சென்று பி.ஏ.பி.எல் பட்டம் பெற்று சென்னையிலேயே வழக்கறிஞராகப் பணியாற்றினார். சென்னைப்பல்கலைக்கழகத்தில் சில காலம் ஆசிரியராக அரசால் நியமிக்கப்பட்டார்.
இலக்கிய வாழ்க்கை
சவுந்தரநாயகம்பிள்ளை ஒரு ஆங்கிலப் பத்திரிகையை சில காலம் வரை நடத்தினார். நன்னூற் சுருக்கம், தெலுங்கு இலக்கணம், மெய்ஞ்ஞானக் கீர்த்தனை ஆகிய நூல்களை இயற்றினார். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதினார்.
மறைவு
சவுந்தரநாயகம்பிள்ளை நோய்வாய்ப்பட்டு 1882-இல் காலமானார்.
நூல் பட்டியல்
- நன்னூற் சுருக்கம்
- தெலுங்கு இலக்கணம்
- மெய்ஞ்ஞானக் கீர்த்தனை
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967, பாரி நிலையம் வெளியீடு
- பாவலர் சரித்திர தீபகம்: அ. சதாசிவம்பிள்ளை: கொழும்பு தமிழ்ச்சங்கம்
✅Finalised Page